டாக்டர்.அம்பேத்கரின் சுயசரிதை
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனித தன்மையற்றச் செயல்
ஏன் இத்தனை பீடிக்கைகள்? அப்படி அந்த கோரமான தீண்டாமை என்றால் என்ன? சாதியக் கொடுமைகளால் இவன் மேல் சாதி இவன் கீழ் சாதி என்று மனிதன் பிளவு பட்டு, அவர்களே வகுத்துக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளின் ஈனமான செயலே இந்த தீண்டாமை. மனித இனமென்ற ஒறே இனம் தான் தன்னைப் போன்ற சக மனிதனையும் சமமாககப் பாராமல் இவன் கீழ் சாதி என்று சொல்லி விலங்கைக் காட்டிலும் மோசமான சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தது. ஒருவன் தாழ்த்த வகுப்பை சேர்ந்தவன் என தெரிந்தால் அவர்களுக்கு அல்லல் பாடுதான் .இந்த மேல் சாதி மிருகங்களுக்கு வெள்ளையனே மேல்.
தீண்டாமையை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்து இருந்திருக்கும்? ஒவ்வொரு முறையும் அவர்கள் மறுக்கப்படும் போதும் ஒடுக்கப்படும் போதும் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏத்தனையோ! அன்றும் இன்றும் சாதியின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. தாழ்த்தப் பட்டோர் என்பதால் அவர்களைத் தொடக்கூடாது,அவர்கள் கைப்பட்டால் தீட்டு ,என்பதுப் போன்ற கேவலாமான செயல்கள் நம் நாட்டில் அதிகமாக அரங்கேறி இருக்கிறது.
இத்தகைய சீர்கேடான நிலைகளில் இருந்து நம்மை மீட்டு ,சாதிய கொடுமைகளைக் களைந்து மூச்சு முட்டி வாழ்வின் விளிம்பில் இருந்த மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த நாயகனின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் இக் கட்டுரை வாயிலாக.
உனக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா? நீயெல்லாம் ஸ்கூலுக்கு வரலாமா? அந்த தண்ணிய நீ குடிக்கக் கூடாது,நீ தொட்டா தீட்டு, இங்க நிக்காத ஓரம் போய் நில்லு என்ற வசை பாடியவர்கள் முகத்தில் பளீரென்று அறைந்ததை போன்று உழைப்பால் உயர்ந்த போராளின் வாழ்வியல் இது.
இன்று நாம் கொண்டாடும் சுதந்திர இந்தியவின் அரசியல் அமைப்பின் அச்சானி,
Dr.பீம்ராவ் ராம்ஜீ அம்பேத்கரால் எழுதப்பட்ட சுயசரிதை.
ஆங்கிலத்தில் “வேய்டிங் பார் விசா” “ waiting for a visa” என்று பெயரிடப்பட்டு அம்பேத்கராலே எழுதப்பட்டது. இது 6 பிரிவுகளைக் கொண்ட 20 பக்கம் மட்டுமே கொண்டுள்ள சுய வாழ்வு நிகழ்வுகள் உள்ளடக்கிய புத்தகம். இந்த அத்யாயங்களில் முதல் 4 அத்யாயங்கலில் அம்பேத்கர் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த தீண்டாமை கொடுமைகளையும் அடுத்த இரண்டில் பிறருக்கு நேர்ந்த கொடுமைகளையும் நினைவு கூற்கிறார். Waiting for a visa வெளினாட்டவர்களுக்கு தீண்டாமை கொடுமைகளைள் எத்தகையது என்பதனை சுருக்கமான முகவுரையில் இருந்து தொடங்குகிறது.
முதல் அத்யாயம் இவ்வாறாக தொடங்குகிறது, அப்போது அவருக்கு ஒன்பது வயது இருக்கும் தன் தாயின் மறைவுக்குப் பின் அம்பேத்கரின் தந்தை காசாளர் பணிக்காக கோரேகான் செல்ல நேர்ந்தது. அச்சமயத்தில் அவரோடு சேர்ந்து அவரின் சகோதரர்கள் மற்றும் இறந்த சகோதரியின் மகன்கள் அம்பேத்கரின் அத்தை பாதுகாப்பில் விடப்பட்டிருந்தார்கள். அவரின் தந்தையால் பணிச்சுமை காரணமாக அவ்வபோது இவர்களை வந்து காண இயலாது. அவர்களின் அத்தைக்கோ உடல் நல குறைபாடு,அவரால் சமைக்கவும் இயலாது. இந்த சிறுவர்களே சமைக்கவும் நேரிட்டது. எளிய மட்டன் களந்த அரிசி புலாவே இவர்களின் வழக்கமான உணவாக இருந்தது. ஒருமுறை கோடை விடுமுறையை தன்னுடன் வந்து செலவிடும்படி தந்தையிடம் இருந்து இவர்களுக்கு கடிதம் கிடைத்தது. கடிதம் கிடைத்ததில் இருந்தே பெரும் மகிழ்ச்சியால் குதுகளித்தார்கள். முதன் முதலாக தொடர்வண்டியில் பயணம் செய்யப்போகும் ஆர்ப்பறிப்பு, தந்தையை காணப் போகும் ஆனந்தம் என சந்தோஷத்தில் துள்ளி குதித்து கோரேகானுக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.
இவர்களை கோரேகானுக்கு வரவேற்க முன்பே இவர்களின் பிரயாண செய்தியை தனக்கு தெரிவிக்கும்படி அவரின் தந்தை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
பிரயாணத்திற்கு தங்களை சிறப்பாக தயார் செய்துக் கொண்டு புத்தாடை உடுத்தி உற்சகமாக இரயிவே ஸ்டேஷனுக்கு வந்தார்கள். பின் அங்கிருந்து கோரேகானுக்கு செல்ல, அதற்கு அன்மையில் உள்ள மசூர் என்ற இடத்திற்கு வந்து இறங்கினார்கள். வந்து வெகு நேரம் ஆகியும் இவர்களை கோரேகான் அழைத்து செல்ல யாரும் வரவில்லை. அவரின் தந்தையால் அனுப்பப்படும் என்ற பியூனுமில்லை, தந்தையும் வரவில்லை. வெகு நேரமாக அந்த ஸ்டேஷனில் கால் வலிக்க நின்றுக் கொண்டிருந்தனர்.
அச்சமயத்தில் இவர்கள் வெகு நேரமாக அங்கு நிற்பதை கண்ட ஸ்டேஷன் மாஸ்டர். இவர்களிடம் நீங்கள் யார் இங்கு ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட கனத்தில் இவர்களிடம் இருந்து வந்த பதிலால் அதிர்ந்தார்.நீங்கள் யார் என்பதிற்கு அவர்களின் பதிலில் நாங்கள் ஒரு மஹர் என்று சொன்னதால் அவர்களிடம் அதற்கு மேல் பேசக் கூட தயராக இல்லை இந்த ஸ்டேஷன் மாஸ்டர். இவர்களின் காத்திருப்புக்குப் பின், தாழ்த்தப்பட்டோரை வண்டில் ஏற்ற மனமில்லாத ஒரு டோங்கலாவை ( மாட்டுவண்டி) இரட்டிப்பான பணத்திற்கு வடகை எடுத்து அதுவும் அவர்களே அதை ஓட்டிச் செல்லுமாரு கட்டளை யிடப்பட்டு அந்த டோங்கலாக் காரண் கால்நடையாக இவர்களைத் தொடர இந்த கோரேகான் பயணம் அமைகிறது.
மூன்று மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு இந்த டோங்கலாக் காரணால் பல மணிநேரம் ஆனது. மகிழ்ச்சியில் ஆரம்பித்த பயணம் இப்போது சோகமயமாக செல்கிறது. வழியில் பசியார பல்வகை உணவு பண்டமிருந்தும் குடிக்க தண்ணீர் இல்லாததால் ( தாழ்ந்த குலத்தவர் என தண்ணீர் தர மறுத்ததால்) சாப்பிட முடியாமல் கிடந்த பட்டினி, வழியில் இந்த கொடுற டோங்கலாக் காரண் நம்மை என்னச் செய்வானோ என்ற திகிலோடு இருட்டில் பயணித்த நிமிடங்கள், அவர்களின் வரவை தந்தையிடம் சொல்லாத பியூனின் செயல் என இவையாவும் அம்பேத்கரின் பால்ய கால நிகழ்வுகள். என்றுமே இந்த கோரேகான் பயணத்தை நினைத்தால் நெஞ்சை அழுத்தும் நினைவாகவே இருந்திருக்கிறது.
அவர் அனுபவிக்காத தீண்டாமைக் கொடுமைகலா? பள்ளியில் சக மாணவர்களோடு அமரவிடாமல் சாக்கில் அமரவிடப்பட்டார், பள்ளியில் குடிக்க தண்ணீரும் மறுக்கப்பட்டது, இவர்கள் வீட்டு துணிகளை துவைக்க தோபிகளும் ஒதுங்குவர், முடிசவரம் செய்ய இவர்களுக்காக எந்த பார்வரும் முன்வர மாட்டான். ஏன்? இவர்கள் தாழ்ந்தவர் என்பதால் இவர்களைத் தொட்டால் பெரும் தீட்டாம்.
இச் சம்பங்களைக் காட்டிலும் இந்த கோரேகான் பயணம் தான் எப்போது நினைத்தாலும் மனகசப்பான நினைவு என்று அம்பேத்கர் அவர்களின் கூற்றமைகிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கே இந்த நிகழ்வு கசப்பாகத்தான் இருக்கிறது. தீண்டப் படுபவர்களால் தீட்டகூடாதவர்களுக்கு நேர்ந்த தீண்டாமை கொடுமை.இந்த புத்தகத்தை உள்ளார்ந்து படிக்கும் போது இன்னும் இந்த பயணத்தில் இவர்கள் அனுபவித்த வேதனையை உணர முடியும்.
இரண்டாம் அத்யாயத்தில் இதனையும் விட இருக்க இடமில்லாமல் ஒதுங்க இடம் தேடி அலைந்த நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொள்கிறார். இத்தருனம் முன்னதைக் காட்டிலும் மோசமானது.அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்ற அம்பேத்கர் அவர்கள் வருகிறார். இங்கும் இரயில்வே ஸ்டேஷனே பிரதான இடமாக அமைகிறது. இருக்க இடமில்லாமல் போக இடம் தேடி தவிக்கிறார். அங்கு ஒரு இந்து ஹோட்டல் இருந்தும் அங்கு இவரை அனுமதிக்கமாட்டார்கள் என்பதை அவர் அறியாமல் இல்லை. எப்படியோ ஒரு பார்ஸி சத்தரத்திற்கு வருகிறார் அங்கும் அவர் மறுக்கப்பட்டு பின் தங்க அனுமதி கிடைக்கிறது.
அதுவும் சில நாட்கள் தான் .அந்த இடமொன்றும் பெரிய இடம் கிடையாது வெளிச்சமும் காற்றும் போதாமல் கிடக்கும் ஒரு டஞ்சன் அறை போல தான் அவ்விடம் இருந்து இருக்கிறது. அலுவலக குடியிருப்பும் கிடைக்வில்லை.அந்த குடோன் அறையின் தனிமையும் பணியுமென நாட்கள் செல்கிறது. தீடிரென்று ஒரு நாள் அவர் பார்ஸி இல்லை என்பதால் அவர் அங்கிருந்தும் விரட்டப் படுகிறார். உதவ நண்பர்களும் முன் வரவில்லை. இருக்க இடமில்லாமல் பல மணி நேரம் பூங்காவல் தஞ்சமடைகிறார். பல மனவதைகளுக்கு உட்படுத்தப்படுகிறார் தொண்டை அடைக்க அழுகையும் பீரிட்டு கிளம்புகிறது. பின் அங்கிருந்து வெளியேறி இருக்க இடமில்லாமல் பாம்பேவிற்க்கே திரும்புகிறார். இப்போது அவர் இன்னொறு கூற்றை நினைவு கொள்கிறார்.
எவன்( தாழ்ந்தகுலத்தவன்) ஒரு இந்துவிற்கு தீண்டப்படாதவனோ அவன் பார்ஸிக்கும் தீண்டப்படாதவனே! அந்த பார்ஸிகள் கையில் லட்டியை வைத்துங் கொண்டு நீ யார் இங்கு ஏன் வந்தாய் ? இந்த இடத்தின் புனிதத் தன்மையை கெடுத்துவிட்டாய் ஒரு பார்ஸி அல்லாதவனுக்கு இங்கு தங்க அனுமதி இல்லை சீக்கிரம் கிளம்பு என்று அச்சுருத்தின போது அவரின் மனவோட்டம் எப்படி இருந்து இருக்கும்.ஒருவன் போகும் இடமெல்லாம் மறுக்கப்பட்டால் எங்கு செல்வான்? அவனின் கதி என்னாகும்?
மூன்றாம் அத்தியாயத்திற்கு வருவோம் இங்கு சட்டம் படித்தவனின் பெறுமை ஒரு இந்து வண்டிக்காரனால் தோற்க்கடிக்கப்படுகிறது என்றே அம்பேத்கர் கூறுகிறார். 1929 ஆம் வருடம் பம்பாய் அரசு தீண்டத்தகாதவர்களின் குறைகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருந்தது. அந்த குழுவில் அம்பேத்கரும் இடம் பெற்றிருந்தார். தீண்டத்தகாதவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும் அடக்கு முறையைகளையும் அநீதியையும் விசாரிக்கவே அந்த குழு. ஆனால் விசாரிக்கே வந்தவனுக்கே தீண்டாமை கொடுமையில் சிக்கவைத்தது.இந்த குழுவின் சுற்றுப் பயணத்தின் போது இந்த கோர விபத்து அம்பேத்கர் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
அவருக்கு காண்டேஷ் என்னுமிடத்தில் பணி நியமிக்கப்பட்டிருந்தது அதனை முடித்துக் கொண்டு பம்பாய் செல்கையில் சாலிஸ்கானில் அந்த கிராம மக்களின் விருபத்திற்க்காக தங்க நேர்ந்தது. அந்த சாலிஸ்கான் ஸ்டேஷனில் இருந்து இந்த கிராம மக்களின் இருப்பிடமான மஹர்வாடாவுக்குச் செல்ல இரண்டு மையில்கள். அப்போதுதான் மறுபடியும் முதல் அத்யாயத்தில் அரங்கேறிய அந்த நிகழ்வுப் போன்றே இம் முறையும். டோங்கலாக் காரண் வண்டி ஓட்ட மறுக்க, இருந்த மக்கள் கூட்டத்தில் ஒருவன் பரிச்சயம் இல்லாமல் அவரை வைத்து வண்டி ஓட்டி சென்றதில் விபத்துக்குள்ளாகி எலும்பு முறிவே ஏற்பட்டு விட்டது.
இப்போது அவர் மனதில் நினைத்துக் கொண்டது, சட்டம் படித்தவன் டோங்கலாக் காரணால் தோற்கடிக்கப்படுகிறான்.
நான்காம் அத்தியாயத்தில், 1934 ஆம் வருடம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இயக்கத்தில் இருந்த சக பணியாளர்களோடு சுற்றுலா செல்கையில் தொளாபாத் கோட்டையை பார்வையிட செல்கையில், அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் கால் நினைத்ததர்க்காக தண்ணீரை மாசு படுத்திவிட்டீர்கள் என்று முகமதியர்களாலும் தூற்றப்பட்ட சம்பவம், ஒரு தீண்டத் தகாதவன் எந்த இந்துவிற்கு விரோதியோ, எவன் பார்ஸிக்கு பகைவனோ இங்கே அவன் முகமதியருக்கும் விரோதியே! என்று நினைக்க வைத்தது.
இவ்வாறு இந்த நான்கு அத்யாயங்களில் அவருக்கு நேர்ந்த தீண்டாமை கொடுமைகளை நினைக்கும் போது இப்போதும் மனம் பதபதைக்கிறது.
அவர் தீண்டத்தகாதவராக இருந்து இருக்கலாம், எல்லா இடங்களிலும் மறுக்கப்பட்டு இருக்கலாம், அத்தனை முறையும் ஒடுக்கப்பட்டவன் தான் இன்று நம் நாட்டின் அடையாளம். நம் நான் பெறுமை. தி பிரைட் அப் அவர் நேஷன். சட்டமேதை டாக்டர் அன்னல் பாபா சாகேப் அம்பேத்கர். இந்தியாவின் அரசியல் அமைப்பின் ஆணிவேர்!
அடுத்த இரண்டு அத்யாயங்களில் சமூகத்தில் அரங்கேறிய தீண்டாமை கொடுமைகள் இரண்டை விவரிக்கிறார். ஐந்தாம் அத்யாயத்தில் 1924 இல் காந்திஜீயின் தி யங் இந்தியா என்ற பத்திரிக்கையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கும் தன் மனைவிக்கும் நேர்ந்த தீண்டாமை கொடுமை பற்றிய கட்டுரையைப் பற்றி விவரிக்கிறார். அந்த தீண்டத்தகாத பள்ளி ஆசிரியரின் மனைவி பிரசவித்தவுடன் நோயால் வாட, அவள் தாழ்ந்தகுலத்தவள் என்பதற்க்காக மருத்துவர் ஒருவர் அவளுக்கு மருந்துவம் பார்க்க முன்வர வில்லை. ஒரு தெர்மாமீட்டர் வைத்து பரிசோதிக்க தயக்கம் காட்டியதால் சீரான மருத்துவம் கிடைக்காமல் நோயால் தன் சேயை விட்டு இறந்தாள்.
ஒரு தீண்டத் தகாதவனைவிடவும் மனித நேயமற்றச் செயல் சிறந்ததா? என்று எண்ண வைக்கிறது. இது மற்றதைக் காட்டிலும் ஈனமானச் செயலல்லவா? தீண்டாமையால் ஒரு உயிரேப் போக நேர்ந்தது ஆனால் இதைப் பற்றியெல்லாம் அந்த தீண்டக் கூடிய சீலர்களுக்கு கவலையில்லைப் போலும். எவன் செத்தா நமக்கென்ன என்ற பேர்வழிகள் போலும். ச்சீ இவர்களுக்கு எப்படி தான் மனசு வருகிறதோ! உயெரையே குடிக்கும் இந்த தீண்டாமை கொடுமைகள் நமக்கு நேர்ந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம் சற்று சிந்தித்துப் பார்த்தால் நெஞ்சே கனக்கிறது.
கடைசி அத்யாயத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் அரசு அலுவலகத்திற்கு எழுத்தாளர் பணிக்காக வருகிறான்.அவன் தீண்டத் தகாதவன் என்பதால் அவனிடமிருந்து அதற்கான படிவத்தை அந்த உயர் அதிகாரி தன் கைகளால் தொட்டு வாங்க மறுக்கிறான், அந்த படிவத்தை தரையில் தனக்கு முன் தள்ளும்படி சொல்கிறார்.அலுவலகத்தில் அவன் அமர இடம் கிடையாது,தங்கவும் இடமில்லாமல் பதினோறு மையில் அவனை நடக்கவைத்து அவனுடைய புர்வீகத்திலேயே தங்க நேர்கிறது.
அலுவலகத்தில் அவனுக்காக அழுக்கும் துருவும் பிடித்த பாத்திரம் தண்ணீர் குடிப்பதற்க்காக வைக்கப்படுகிறது அதுவும் அந்த பியூன் தான் வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும், அவனில்லை என்றால் அந்த அழுக்குத் தண்ணீரும் கிடையாது. ஒருமுறை அங்கிருக்கும் நூலக பொருப்பாளியின் நார்காலியில் அமராந்ததால் ஊரே திரண்டு அவனை மிரட்டி அச்சுருத்திய சம்பவம் எத்தனை கொடுரமானது. இறுதியாக அவன் தன் நிலைக் குறித்து மம்லத்தாருக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதுவதாக இந்த புத்தகத்தை நிறைவு செய்கிறார்.
இந்த waiting for a visa,கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாட நூலாக சிறப்பிக்கிறது. ஆனால் இங்கு நமக்கு
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனித தன்மையற்றச் செயல் என்று பள்ளி பாட புத்தகத்தில் அச்சிட்டதோட சரி. தீண்டாமை ஒரு பாவச்செயல்,பெருங்குற்றம், மனித நேயமற்றச் செயலென்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? அதன் கொடுமைகளை எடுத்துரைக்காவிடின் அத்தகைய செயல்கள் தவறென்று சிறுவயதிலிருந்தே மாணவர் மனதில் புகுத்தாவிடின், இன்னும் சாதிக் கொடுமை இருக்கத்தான் செய்யும். ஐந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையும்.
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று உங்களின் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்காவிடில் இனியும் சாதிக் கொடுமைகள் தொடரும்.
நாமனைவரும் ஒரே சாதி
அது மனித சாதி
Comments
Post a Comment