விழித்திரு

 வகுப்பறை சற்று சலசலப்பாக இருந்தது. மாணவர்களின் அறட்டைகள் சைலன்ஸ் என்று பென்சை தட்டிய படி ஆசிரியர் குறலோடு.அவங்க வர நேரத்துல இப்படி சத்தம் போட்டு என் மாணத்த வாங்காதிங்க இப்படி சத்தம் போட்டுக் கிட்டே இருந்தா எல்லாரையும் வெளிய தொரத்திடுவே பாத்துக் கோங்க அப்பறம் நீங்கலாச்சி பிரின்ஸ்பலாச்சி. என்று அந்த ஆசிரியர் அதட்டிக் கொண்டு இருக்கையில் பிரின்ஸ்பலோடு ஒருவர்  சற்றுத் தாங்கிய படி நடந்து வந்தார். பிரின்ஸ்பல் வந்ததும் மாணவர்கள் அமைதியாகி விட்டனர். இது எப்பவும் நடக்குற நிகழ்வுதானே. வகுப்பறை முழுவதும் சலனமில்லாமல் இருக்கையில் பிரின்ஸ்பலோட உரை தொடங்கியது. டியர் ஸ்டுடண்ஸ் இன்னிக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும்னு நம்பறேன். இவர் பெயர் மாணிக்கம் உங்க கிட்ட உரையாட வந்திருக்காரு .என்று வந்தவரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு போய்டார். இப்ப வந்த அந்த நபர் யாரு எதுக்கு வந்திருக்காரு என்ன பேசப் போராருனு பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில். மாணிக்கம் சிறிது நேரம் எதுவும் பேசாமல் வகுப்பறையை சூற்றி பார்வையிட்டார். சட்டென்று அவர் பார்வை  இரண்டாவது பெண்ச் ஒரமாக அமர்ந்திருந்த ஒரு மானவியின் மேல் விழுந்தது. சின்னதாய் முத்துக் கம்பல் இரு காதுகளிலும் மின்ன தலையை சற்று இழுத்து வாரி ரெட்டை ஜடை பின்னலோடு அமர்ந்திருந்த அந்த பெண்ணைப் பார்த்ததும், அவர் கண்முன் பல காட்சிகள் ஞாபகத்திற்கு வந்ததன.அந்த பிண்பம் சற்று மனதிற்கு ஆறுதலோடு சேர்ந்து வலியையும் உண்டு பண்ணிற்று. 

அந்த பெண்ணின் திருத்திரு பார்வையும் அவள் ஜடையும் போன வருஷம் செத்துப் போன தன் அன்பு மகள் காவியாவை நினைவுபடுத்தி விட்டது. அவளைப் பார்த்ததும் எழுந்த மனபாரத்தை என்ன சொல்லி விவரிக்க விம்பி பொங்கி எழுந்த கண்ணிரை சற்றே யாருக்கும் தெரியாமல் கைக்குட்டையில் துடைத்துக்  கொண்டு பேச ஆயத்தமானார். முதலில் அவர் பேச்சை கேட்க ஆர்வமில்லாமல் இருந்த மாணவர்கள் மெல்ல மெல்ல செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடந்த உரையது.   தான் சொல்ல வந்ததை முழுவதுமாக மாணவர்கள் மனதில் பதிய வைத்து விட்டோம் என்ற நம்பிக்கையில் தாங்கிய படியே வெளியே நடந்துவந்துக் கொண்டிருந்தார். சற்று தூரம் நடந்ததும் திரும்பவும் அந்த பொண்ண பாத்ணா நல்லா இருக்கும்ல நாளைக்கு திரும்ப இந்த பொண்ண பாக்கவே  வரனும் வரப்போ லலித்தாவையும் கூட்டிட்டு வரனும் அவ பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவா என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தார். 

யார் அந்த லலிதா ,ஏன் இவருக்கு அந்த பொண்ணு மேல இவ்வளவு நாட்டம்?.அந்த வகுப்பறையில் இருந்து ஒவ்வொரு அடி எடுத்து வைக்க, முன்பு நடந்த சம்பவங்கள் மனதை குத்தி ரணமாக்கியது. அன்னைக்கி நான் அவள கோபிக்காத இருந்து இருந்தா அவ இருந்து இருப்பாலே இப்போ எங்க ரெண்டுப் பேரையும் அம்போனு விட்டுட்டுடுப் போய்டா. என் புத்தியதா செருப்பால அடிசிக்கனும். என் மகவள நானே நம்பல லலிதா எம்புட்டு சொல்லியும் நா நம்பலயே .என்று புலம்பிய படி அந்த பள்ளி முதல்வரிடம் நன்றி தெரிவித்து விட்டு தன்னோட மூனு சக்கர வண்டில வீட்டுக்கு வந்துட்டாரு. வந்ததும் ஏ லலிதா செத்த இங்க வாடி என்று லலிதாதாவை கூப்பிட்டுக் கொண்டே உள்ளேப்  போனார் ஏன்னா என்ன ஆச்சி என்று காப்பிய டப்பராலில் தூக்கிக்கொண்டு வந்த லலிதாகிட்ட இன்னிக்கு நான் ஒரு ஸ்கூல்க்கு போனைல்ல அங்க நான் ஒரு பொண்ணப் பாத்த அச்சு அசல் அவ நம்ப பொண்ணு காவியா மாரியே இருந்தாடி என்று சொல்லியபடி கண்க் கலங்கினார். லலித்தாக்கும் அழுக தொண்ட அடச்சிடுச்சி.மூனு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாணிக்கம் ஒரு கம்பனிக்கு சிஏ வாக இருந்தவர். எதுக்கும் பஞ்சமில்ல .பணம் வீடு காரு எல்லாமே இருந்துச்சி.  ஆச ஆசயா வளத்த ஒத்தப் புள்ளயும் இருந்தா. அன்னைக்கு அவ சாவுக்கு ரெண்டு நாள் முன்னாடில இருந்தே அவ சரியில்ல எதோ யோசனையாவும் பயந்த மாரியுமே இருந்தா ரெண்டு மூணுமுறை என்கிட்ட  எதயோ சொல்ல வந்தா நான் தான் ஆபிஸ் டென்ஷன்ல கேட்கல. நேத்து அவள இப்படி பாத்ததும் என்னால தாங்கிக்க முடில இருவது வருஷம் அவள பாசமா வலத்துட்டு அந்த ஒரு போட்டோ வால அவள நம்பாம போய்டனே. என் மவ அப்படி பண்ணுவாலானு யோசிக்லயே. ஏங்க அவ ஒருமாரி இருக்கா சரியா சாப்பறது இல்ல, தூங்கறது இல்ல,எதயோ பாத்து பயந்தாப்புல போல இருக்கானு ,பாத்ரும் போய்ட்டு தண்ணிக்கூட ஊத்தாம வந்தா அவ இப்படிலாம் இருந்ததே இல்லனு  நீ சொன்னப்பவும் நான் கண்டுக்கலனு மாணிக்கம் காவியாவின் மறைவால் தேம்பி அழுவிட்டார். 

காவியா செம அழகு படிப்புல சுட்டி, தங்கமான பொண்ணு ஒருமுறை இரவு முகநூல நோண்டிட்டு இருக்கப்போ அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது அதைப் பார்த்ததும் சீனு கண்ண மூடிட்டு அதவுடனே அழிச்சிட்டா. திரும்ப ரெண்டு மூணு நாள் தொடர்ச்சியாக இந்த மாரியே வந்தது அனுப்பரவங்க யாருனும் தெரில அந்த மெசேஜ்ல ஒரு ஆணோடய படம் ஆடையில்லாமல் வந்தது, பின் பல்லேறு சகிக்க முடியாத ஆபாசமான படங்கலும் வந்தது இதப் பார்த்துட்டு காவியா முகநூலுக்கே கொஞ்ச நாள் போகாம விட்டுட்டா , இப்ப திருப்ப வாட்ஸ்அப்லையும் அதே மாரி அன்னோன் நபரிடமிருந்து வந்த போட்டோ தான் தூக்கி வாரிப் போட்டது, பயத்துல கைக்காலெல்லாம் வெடவெடத்துப் போய்டுச்சி இப்ப வந்தது ஆடையில்லாமல் இருக்கும் அவளோடைய படம். இதப் பார்த்துட்டு ஒன்னுமேப் புரியல, ஆடையில்லாமல் இருக்கும் வேர ஒரு பெண்ணுடலோடு இவ முகத்தை ஒட்டி அனுப்பப்பட்டது. அவ இதப் பத்தி யார்கிட்டயுமே சொல்லை, அந்த நபர் கிட்ட இருந்து வந்த அழைப்பை சற்று நடுக்கமாகவே எடுத்தாள். இந்த படத்துல இருக்கறது நீ இல்லனு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனா வெளியுலகம் நம்புமா? ஒழுங்க நா சொல்றப்படி நடந்துக்கோ இல்லனா நீதா சோசியல் மீடியாவுல டிரெண்டுனு சொல்லி போன வச்சிட்டான். இது நடந்து ரெண்டு நாள் கழிச்சி மாணிக்கம் நம்பருக்கு இதே போட்டோ வந்தது. அவர் அதைப் பார்த்துட்டு அதிர்ந்துப் போய்ட்டாரு.பெத்த பொண்ண இப்படி பாத்தா பதட்டம் வரதான் செய்யும் உடனே காவியாவை கூப்பிட்டு கேட்டார். இங்கப் பாரு என்ன இதலாம் என்று சற்று அதட்டிய வாரே. அப்பா எனக்குத் தெரியாதுப்பானு எனக்கும் இப்படி தான் வந்துச்சி ,நானில்லாப்பா அதுனு அழுது கதறிவிட்டாள். உன் மூஞ்சிதான இதுல வருது நீ இல்லனா இதுயாரு பொண்ணப் பெத்தா இதலா பாக்க வேண்டியதா இருக்கு  காதல் கத்தரிக்காய்னு இப்படி பண்ணியா இல்ல எதுக்கு இப்படி பண்ணனு மாணிக்கம் அதட்டுனப்ப ஒடஞ்சிட்டா.ஏங்க அவள ஏன் கோசிக்கறீங்க அவ இப்படி பண்ணிருக்க மாட்டா நல்லா விசாரிங்கனு லலித்தா சொன்னப்பக் கூட அவர் கேட்கற மனநிலையில் இல்ல.தன் அப்பா தன்னை இந்த மாரி பாத்ததுக்கே வீட்டுல இந்த கதி இத வெளி உலகம் பாத்தா என் மாணமே போய்டும் எல்லாரோட ஏச்சு பேச்சுக்கும் ஆலாவ, எத்தன பேர்கிட்ட இது நான் இல்லனு சொல்லறது சொன்னாலும் நம்புவாங்கலானு யோசிச்சவ காலில லலிதா அவ ரூமுக்கு வந்துப் பாத்தப்ப தூக்குல தொங்கி கிடந்தா. லலிதா கண்ணுமுண்ணாடி தவமா இருந்து பெத்த மவ இப்படி கிடக்கறத பாத்து வாயிலயும் வயித்துலயும் அடித்துக் கிட்டு  அழுது மயக்கம் போட்டே விழுந்துட்டா. மாணிக்கத்துக்கு துக்கம் தாங்கல நம்ப புள்ளைய நம்பலே கொண்ணுட்டோமேனு துடிச்சிட்டாரு. 

என்னச் சொல்ல பெண் மேல ஏற்றி வைக்கப் படும் உடலென்னும் சுமை சாவுகாசமாக காவுவாங்கி விடுகிறது 

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு அப்பறம் தான் மாணிக்த்திற்குத் தெரிந்தது அவர்கள் மீது நடத்தப்பட்டது சைபர் தாக்குதல் என்று.

தன்னோடு கம்பனியில் வேலைச் செய்யும் ரவி என்பவன் பணம் கையாடல் செய்ததை மேலதிகாரியிடம் தெரிய படுத்தியதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்க திட்டமிட்டு மாணிக்கத்தை அவமானப்படுத்த அரங்கேறிய நாடகமென்று தெரியவந்தது. 

ஒருவரை மனதளவில் தாக்க, அவர்கள் நன்மதிப்பை உடைக்க சில கிரிமினல்கலால் அரங்கேற்றப் படும் சைபர் குற்றம் இன் நாட்களில் பரவலாக காணப்படுகிறது. ஆய்வின் முடிகளில் மார்பிங், பணம் கையாடல், கடவுச் சொல் திருடல், சைல்டு போனோகிராபி   போன்றவை அதிகமாக நடப்பதாக தெரியவந்துள்ளது. 

இன்டர் நெட்டில் நடக்கும் இதுப் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுப்படிப்பது சற்றுத் சாவாலாகவே உள்ளது நாளுக்கு நாள் நாம் அனைவரும் இ- சேவைகளில் இணைந்துள்ளோம். வகுப்பு பாடத்யிற்காகவோ, பணப் பதிவர்தனைக்காகவோ, அலுவலக பணிக்காகவோ என்று எல்லாமே இனணையதள மார்கமாகவே மாறிவிட்டது. 

குற்றங்களும், இப்போது அட்வான்ஸ் லெவலுக்குச் சென்று இணைய மார்க குற்றங்கலாக மாறி பல காலங்களாக லாகிவிட்டன.நாம் உஷாராக இருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் எளிதில் நம்மை சிக்க வைக்கலாம் 

இதில் சைபர் புல்லிங் பெரும் பாடாக படுத்தி வருகிறது. பெண்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்புவது ,அவர்களின் உருவங்களை மார்பிங் செய்வது, பள்ளி குழந்தைகளுக்கும்  மனவதையை ஏற்படுத்தும் சைல்டு போனோகிராபிக்ளின் தலைவிவிரி ஆட்டத்திற்கு பலர் இரையாகியுள்ளனர் .

இதுப் போன்ற சைபர் குற்றங்கள் பணபறிப்பில் ஆரம்பித்து ஆளையும் குடித்து விடுகிறது. 

தான் சைபர் புல்லிங்கிற்கு உட்படுத்தப் பட்டோம் என்று தெரியாமல் மாணிக்கம் தன் மகளை தொலைத்துவிட்டார். இது எதனால் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் , மகளின் இறப்பு, அவளுக்கு நடத்த கொடுரம் என தனித்தனியாக வழக்குப் போட்டு  இருந்தால் ஐபிசியிலும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் மூலமும் குற்றவாளிக்கு அபராதத்தோட சேர்ந்த கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதுப்பற்றிய அறியாமையால்  இதைச் செய்ய தவரிவிட்டார். மகளையும் பறிகொடுத்து விட்டார். 

என்னைக் கேட்டால் பாமரனும் சட்டம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.பல பிரச்சினைகளில் இருந்து சட்டம் நம்மை காக்கும். 

அன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு மாணிகத்திற்கு  விபத்தில் காலடிப்பட்டு ஊனமாகி விட்டது வேலையில் இருந்து விடுவிக்கப் பட்டார் அன்றில் இருந்து சைபர் கிரைம் பற்றி ஆராய்ந்து தெரிந்துக் கொண்டு இனியும் எந்த ஒரு அப்பனு தம் புள்ளய இழந்துடக் கூடாதுனு அந்த ஊனமான கால வச்சிகிட்டு ஸ்கூல் காலேஜுனு போய் பசங்ககிட்ட இந்த இணைய தள குற்றங்கலப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு இருக்காரு போர எந்த இடத்துலயும் காசு வாங்கறது இல்ல கடமையா நினச்சி செய்யராரு.

ஏய் லலிதா நாளைக்கு நம்ப பெண்ணுக்கு பிறந்த நாள் வருதுல்ல இந்த தடவ அவ ஞாபகமா வாங்கன புடவைய நான் இன்னிக்கு ஸ்கூல ஒரு பொண்ண பாத்தனே அவளுக்கு தரலாமா என்று கண்கலங்கி விட்டார். 

நாம் நினைப்பதுப் போல் இணையத் தளம் மோசமானது அல்ல. அதை சில விஷமிகள் மோசடித்து விடுகிறன. இதைக் கண்டு அஞ்சாமல் தெரியமாக அனுகினாலே அதை கடந்துவிடலாம். 

நாம் இதுபோன்ற இணையதள கொடுமைகளுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்று தெரிந்தாலே காவல் துறையை அனுகி சரியான பாதுகாப்புக் கோரலாம். இருந்த இடத்தில் இருந்தே புகாரலிக்கும் வாய்ப்பும் அரசு ஏற்ப்படுத்தி உள்ளது. வழக்குத் தொடுத்தால் குற்றவாளிகள் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப் படுவார்கள். 

இதனையும் விடமும் வருமுன் காப்போம் என்பதுப் போல விழிப்புணர்வுவோடு இருப்பது அவசியம்.  பெற்றோர்கள் இது போன்ற ஆபத்துக்களில் தங்கள் பிள்ளைகள் சிக்கிக்கொண்டால் அவர்களுக்கு தைரியமாகவும் பக்கபலமாகவும் இருந்து அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மாறாக அவர்களே பயமுறுத்தும் பூதங்கலாகிவிடக் கூடாது.

சிராரகள்  ஆன்லைனில் விளையாடும் போதும் படிக்கும் போதும் தங்களின் பார்வை சற்று அவர்கள் மீது வைப்பது நல்லது அது நம்பிக்கையின்மையாக நோட்டம் விடுவது போலில்லாமல் ஆரோகியமானதாக இருக்க வேண்டும். 

ஓட்டலுக்கோ, துணிக்கடை உடை மாற்றும் அறைக்கோச் சென்றால் கேமரா இருக்கா இல்லயா என்று உறுதி செய்துவிட்டு உடை மாற்றுவது நல்லது. 

இதயும் மீறி எவனோ ஒருவன்  நம்மை படம்பிடித்துப் போட்டால்,

போடா டேய்னு தைரியமாக இருப்பது அதைவிட நல்லது. 

ஜஸ்ட் ஹியூமன் பாடி அவ்வளவே!

_ மணிமொழி மாறன் 


Comments

Popular posts from this blog

நன்றி செலுத்துதல் (Gratitude)

எண்ணமும் நாமும்

அச்சம் தவீர்!!!