Auto suggestion என்னும் சுயக்கட்டளை
சென்ற பதிவில் எண்ணங்களைப் பற்றி பேசி இருந்தேன் அதன் தொடர்ச்சியாக,நல்ல எண்ணங்கள் ஒருவனை எப்படி கட்டமைக்கின்றன,
இந்த சிறந்த எண்ணங்கள் அவனை எப்படி வெற்றிக்கு ஆயத்தமாக்குகின்றன என்று சற்று பார்ப்போம். நாம் அனைவருமே optimisticகாக இருக்க பழகிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த optimistic என்பது எல்லா சூழலிற்கும் நம்மை தயார் செய்யும் ஆற்றல் பெற்றது.நாம் தொடர்ந்து positiveவாக இருக்கப் பழகி கொண்டால் நாளடைவில் அதுவே நமது சுபாவமாக மாறிவிடும்.
நான் தோற்கமாட்டேன் என்பதைவிடவும் நான் வெற்றியடைவேன் என்பதே சால சிறந்தது.சிந்தனை முழுவதும் தோற்க்கக்கூடாது என்பதுலேயே லாவித்து இருந்தால் வெற்றியை எப்படி அடைவீர்கள் ? சிந்தனை முழுவதும் எண்ணங்களாக பிரதிபலித்து முழுமூச்சாக வெற்றியடைவேன் என்பதுலயே முழ்கிக்கிடந்தாலொழிய வெற்றியின் சுவையை ருசிக்க முடியம்.
நம்மை அனைவரும் விரும்பும்படியாகவும்,வெற்றியாளராகவும்,சிறந்த நல்லெண்ணம் கொண்டவற்கலாக மாற்றவல்ல சக்தியை சுயக்கட்டளை ( auto suggestion)என்னும் பயிற்ச்சியின் வாயிலாகப் பெறலாம். எண்ணங்களே நம்மை யாரென்று தீர்மானிப்பதால் அவ்வாறான எண்ணங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் மிக அவசியமாகிறது.நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல பலனே பெறுவோம். நாம் அனைவராலுமே ஒரு optimistic personனாக நேர்மறை சிந்நனையாளராக இருக்க முடியும் மாறவும் முடியும். இப்போது நாம் எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு இருந்தாலும் நம் மனதை சற்று திசைதிருப்பி நேர்மறை சிந்தனைகளால் நிறம்பிவழிய செய்ய முடியும்.
முடியும் என்றால் முடியம்தானே!!! நம்மை நாம் விரும்பியவாரே செதுக்கிக் கொள்ளவே இந்த positive thinking தேவைப்படுகிறது.அதற்கு சற்று பயிற்சி தான் தேவை. சுயக்கட்டளை பயிற்சியை மேற்கொள்வதால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம்.பல உளவியளாளர்களின் ஆய்வும் இதைத்தான் சொல்கிறது.எண்ணங்கள் குறித்த புத்தகங்களிலும் இந்த சுயக்கட்டளை (auto suggestion) பயிற்ச்சியின் சிறப்பம்சங்களை நாம் காண இயலும்.இத்தகைய பயிற்ச்சிகள் நம்மிடம் நேர்மறை எண்ணங்களை புகுத்தி நமது உடலையும் மனதையும் energeticடாக மாற்றவல்லது.இப்பயிற்சிகள் நம்மிடமுள்ள இருளை போக்கி வெளிச்சத்தை ஒளிறச்செய்யும் கருவிகளாக வலம் வருகின்றன.நம்மில் உள்ள தாழ்வுமனப்பான்மையை களைந்து உத்வேகம் பிறக்கவும் வழிவகை செய்கின்றன.இப்பயிற்ச்சியைப் பற்றி இவ்வளவு பீடிக்கை போடுவதால் பயப்பட வேண்டாம் அது அவ்ளோ பெரிய கஷ்டமான பயிற்ச்சியல்ல மிக எளிதாக ஜாலியாக செய்யக்கூடியதே!
ஒருவன் மனதளவிலும் உடலளவிலும் புத்துயிர் ஊட்டவல்லது இந்த சுயக்கட்டளை.
தாழ்வு மனப்பான்மையில் சிக்குண்டபோதிலும்,தோல்வியால் சலிப்படைந்த போதிலும்,உடல் பலவீனத்தால் தளர்வுற்றிருந்த போதிலும்,நடுக்கத்தில் இருந்த போதிலும் இப்பயிற்சி ஊக்கமருந்தாக இருந்திருக்கின்றன.
Auto suggestion செய்துக் கொள்வது எப்படி?
உங்களைப் பார்த்து திரும்பத் திரும்ப ஒரு வாசகத்தை கூறிக்கொண்டிருத்தல்.
கண்ணாடி முன்னாடி நின்றுக்கொண்டடு உங்கள் கண்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள் நான் யாரென்று ?
Who am I? இக் கேள்விக்கான பதில் புலப்படும்.கண்ணாடியைப் பார்த்து கேட்கும் போது உங்களின் எண்ணங்கள் அதில் பிரதிபலித்து நீங்கள் யாரென்று காட்சிப்படுத்தும்.
" சிலர் இருக்கிறார்கள் எனக்கு என்னையே புடிக்கலனு" சொல்லும் பெயர்வழிகள்.சலிப்பின் சாயலே நீங்கள்தான்.உங்களுக்கு உங்களையே பிடிக்கவில்லை என்றால் வேற யாருக்கு உங்களை பிடிக்கும் ? வேற எதைதான் உங்களுக்கு பிடிக்கும்?
உங்களை முதலில் உங்களுக்கு பிடித்தாக வேண்டுமே! உங்களை நீங்கள் விரும்பினால் தான் பிறருக்கு உங்களை பிடிக்கும்.இப்படி என்னையே எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்காகவே ஒரு அழகான வாசகமுண்டு. அது "நான் என்னை விரும்புகிறேன் " " I love myself " என்பதம். இதுவே சுயக்கட்டளையின் முதல் படி.
உங்களின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.நம்மிடம் உள்ளதை மெச்சிக்கொள்ள வேண்டுமல்லவா? நீங்கள் எப்படி இருக்கீங்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு இரசிக்கப்பழகுங்கள்!
"If you love yourself,you can love others more".
இயற்க்கை வழங்கிய அனைத்தும் அழகானவையே! நமது தாய்த்தந்தையிடமிருந்து நாம் பெற்றவை அனைத்தும் அழகானதும் அற்புதமானதும்கூட. அதை ஏன் பழிக்கறீங்க 'அது நல்லா இல்ல இது நல்லா இல்லனு'.
We are born unique ஓவ்வொறுவரும் ஒரு புதுத்தன்மையுடன் பிறக்கிறோம்.அதில் ஏன் நாம் மற்றவர் போல் இல்லை என்று கசபிற்குள்ளாகிறோம் என்று தெரியவில்லை.உங்களிடம் உள்ள அனைத்தையும் நேசியங்கள் முக்கியமாக இரசியுங்கள்.
இந்த I love myself வாசகத்தை பல முறை உச்சரிக்கும் போது நல்ல ஆற்றல் எண்ணங்கள் வாயிலாக உங்களில் பாயும் அப்போது இத்தனை நாள் உங்களை முடக்கிவிட்ட ஏதோ ஒன்று இப்போது இல்லாமல் புத்துணர்ச்சி அடையலாம்.உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்தையும் இரசியுங்கள்! உடல் உருப்புகள் யாவும் அழகாக குறைகளில்லாமல் நலமுடன் படைக்கப்பட்டதை எண்ணி மகிழுங்கள்.
" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது "
என்ற ஔவையாரின் வாக்கை நினைத்துக் கொள்ளலாம்.
இனி தினமும் கண்ணாடி முன் நின்றுக்கொண்டடு சிரித்த முகத்துடன் I love myself, I love me என்று சொல்லிப்பாருங்கள் மாற்றம் நிச்சயம்.சாதிக்க நினைக்கும் மனிதருக்கு உருவமும்,அழகும்,உடல் நிறமும் முக்கியமில்லை.
சுயக்கட்டளையின் மற்றொறு பயிற்ச்சியைப் பார்ப்போம்:
ஒரு பேப்பரிலோ அல்லது நோட்டிலோ ஒரு பட்டியலாக ஒன்றன்பின் ஒன்றாக இவ்வாறு எழுதி வைத்துக் கொண்டு தினமும் வாய்விட்டு உரக்கப் படிப்பதனால் மாற்றத்தை உணர முடியும். இது போல செய்துப் பாருங்கள்:
1) நான் ஆரோக்கியமாக இருக்கேன்
2) நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
3) நான் நிம்மதியாக உணர்கிறேன் என்று சுயக்கட்டளைகளை நமக்குள் சொல்லிக்கொள்ளும் போது முலையில் தாக்கம் ஏற்படுத்தி நன்மைபயக்கும்.
இந்த "நான் "" I am " என்ற வார்த்தை அனைத்தைக்காட்டிலும் ஆற்றல் வாய்ந்தது.
உடல் நிலை நலிவுற்ற போதிலும் நான் ஆரோக்கியமாக இருக்கேன் நான் நல்லா இருக்கேன் Iam fine, Iam good என்ற auto suggestionனால் அவ்வாறாகவே மாறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
கவலைகள் சூழ்ந்திருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவுள்ளேன் என்ற எண்ணம் அசாத்திய சக்திபடைத்து கவலையை போக்கும் மருந்தாகிறது.
I am good,I am beautiful, Iam strong, I am awesome, I am happy,I am energetic, I am confident , I am unique, I am special, I am worthy, I am healthy, இன்னும் பல....
நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வாசகங்களே உயிர் பெற்று எண்ணம் வாயிலாக நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. சிந்தனையும் சரி பேசும் வார்த்தைகளும் சரி நல்லதாகவே இருத்தல் மிக அவசியம்.
இல்லை என்றால் அங்கு அவசியமற்ற சிந்தனைகள் உட்புகுந்து விடும் பிறகு அனைத்தும் சிக்கல்தான்.
மற்றவர் உன்னைப்பற்றி கூறும் கருத்துக்கள் யாவும் அபிப்பிராயமே தவிர உண்மையல்ல.
விமர்சனங்களை தாங்கும் மனமே அசாத்திய ஆற்றல் படைத்தது.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு
மணிமொழி மாறன்
இந்த சிறந்த எண்ணங்கள் அவனை எப்படி வெற்றிக்கு ஆயத்தமாக்குகின்றன என்று சற்று பார்ப்போம். நாம் அனைவருமே optimisticகாக இருக்க பழகிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த optimistic என்பது எல்லா சூழலிற்கும் நம்மை தயார் செய்யும் ஆற்றல் பெற்றது.நாம் தொடர்ந்து positiveவாக இருக்கப் பழகி கொண்டால் நாளடைவில் அதுவே நமது சுபாவமாக மாறிவிடும்.
நான் தோற்கமாட்டேன் என்பதைவிடவும் நான் வெற்றியடைவேன் என்பதே சால சிறந்தது.சிந்தனை முழுவதும் தோற்க்கக்கூடாது என்பதுலேயே லாவித்து இருந்தால் வெற்றியை எப்படி அடைவீர்கள் ? சிந்தனை முழுவதும் எண்ணங்களாக பிரதிபலித்து முழுமூச்சாக வெற்றியடைவேன் என்பதுலயே முழ்கிக்கிடந்தாலொழிய வெற்றியின் சுவையை ருசிக்க முடியம்.
நம்மை அனைவரும் விரும்பும்படியாகவும்,வெற்றியாளராகவும்,சிறந்த நல்லெண்ணம் கொண்டவற்கலாக மாற்றவல்ல சக்தியை சுயக்கட்டளை ( auto suggestion)என்னும் பயிற்ச்சியின் வாயிலாகப் பெறலாம். எண்ணங்களே நம்மை யாரென்று தீர்மானிப்பதால் அவ்வாறான எண்ணங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் மிக அவசியமாகிறது.நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல பலனே பெறுவோம். நாம் அனைவராலுமே ஒரு optimistic personனாக நேர்மறை சிந்நனையாளராக இருக்க முடியும் மாறவும் முடியும். இப்போது நாம் எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு இருந்தாலும் நம் மனதை சற்று திசைதிருப்பி நேர்மறை சிந்தனைகளால் நிறம்பிவழிய செய்ய முடியும்.
முடியும் என்றால் முடியம்தானே!!! நம்மை நாம் விரும்பியவாரே செதுக்கிக் கொள்ளவே இந்த positive thinking தேவைப்படுகிறது.அதற்கு சற்று பயிற்சி தான் தேவை. சுயக்கட்டளை பயிற்சியை மேற்கொள்வதால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம்.பல உளவியளாளர்களின் ஆய்வும் இதைத்தான் சொல்கிறது.எண்ணங்கள் குறித்த புத்தகங்களிலும் இந்த சுயக்கட்டளை (auto suggestion) பயிற்ச்சியின் சிறப்பம்சங்களை நாம் காண இயலும்.இத்தகைய பயிற்ச்சிகள் நம்மிடம் நேர்மறை எண்ணங்களை புகுத்தி நமது உடலையும் மனதையும் energeticடாக மாற்றவல்லது.இப்பயிற்சிகள் நம்மிடமுள்ள இருளை போக்கி வெளிச்சத்தை ஒளிறச்செய்யும் கருவிகளாக வலம் வருகின்றன.நம்மில் உள்ள தாழ்வுமனப்பான்மையை களைந்து உத்வேகம் பிறக்கவும் வழிவகை செய்கின்றன.இப்பயிற்ச்சியைப் பற்றி இவ்வளவு பீடிக்கை போடுவதால் பயப்பட வேண்டாம் அது அவ்ளோ பெரிய கஷ்டமான பயிற்ச்சியல்ல மிக எளிதாக ஜாலியாக செய்யக்கூடியதே!
ஒருவன் மனதளவிலும் உடலளவிலும் புத்துயிர் ஊட்டவல்லது இந்த சுயக்கட்டளை.
தாழ்வு மனப்பான்மையில் சிக்குண்டபோதிலும்,தோல்வியால் சலிப்படைந்த போதிலும்,உடல் பலவீனத்தால் தளர்வுற்றிருந்த போதிலும்,நடுக்கத்தில் இருந்த போதிலும் இப்பயிற்சி ஊக்கமருந்தாக இருந்திருக்கின்றன.
Auto suggestion செய்துக் கொள்வது எப்படி?
உங்களைப் பார்த்து திரும்பத் திரும்ப ஒரு வாசகத்தை கூறிக்கொண்டிருத்தல்.
கண்ணாடி முன்னாடி நின்றுக்கொண்டடு உங்கள் கண்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள் நான் யாரென்று ?
Who am I? இக் கேள்விக்கான பதில் புலப்படும்.கண்ணாடியைப் பார்த்து கேட்கும் போது உங்களின் எண்ணங்கள் அதில் பிரதிபலித்து நீங்கள் யாரென்று காட்சிப்படுத்தும்.
" சிலர் இருக்கிறார்கள் எனக்கு என்னையே புடிக்கலனு" சொல்லும் பெயர்வழிகள்.சலிப்பின் சாயலே நீங்கள்தான்.உங்களுக்கு உங்களையே பிடிக்கவில்லை என்றால் வேற யாருக்கு உங்களை பிடிக்கும் ? வேற எதைதான் உங்களுக்கு பிடிக்கும்?
உங்களை முதலில் உங்களுக்கு பிடித்தாக வேண்டுமே! உங்களை நீங்கள் விரும்பினால் தான் பிறருக்கு உங்களை பிடிக்கும்.இப்படி என்னையே எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்காகவே ஒரு அழகான வாசகமுண்டு. அது "நான் என்னை விரும்புகிறேன் " " I love myself " என்பதம். இதுவே சுயக்கட்டளையின் முதல் படி.
உங்களின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.நம்மிடம் உள்ளதை மெச்சிக்கொள்ள வேண்டுமல்லவா? நீங்கள் எப்படி இருக்கீங்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு இரசிக்கப்பழகுங்கள்!
"If you love yourself,you can love others more".
இயற்க்கை வழங்கிய அனைத்தும் அழகானவையே! நமது தாய்த்தந்தையிடமிருந்து நாம் பெற்றவை அனைத்தும் அழகானதும் அற்புதமானதும்கூட. அதை ஏன் பழிக்கறீங்க 'அது நல்லா இல்ல இது நல்லா இல்லனு'.
We are born unique ஓவ்வொறுவரும் ஒரு புதுத்தன்மையுடன் பிறக்கிறோம்.அதில் ஏன் நாம் மற்றவர் போல் இல்லை என்று கசபிற்குள்ளாகிறோம் என்று தெரியவில்லை.உங்களிடம் உள்ள அனைத்தையும் நேசியங்கள் முக்கியமாக இரசியுங்கள்.
இந்த I love myself வாசகத்தை பல முறை உச்சரிக்கும் போது நல்ல ஆற்றல் எண்ணங்கள் வாயிலாக உங்களில் பாயும் அப்போது இத்தனை நாள் உங்களை முடக்கிவிட்ட ஏதோ ஒன்று இப்போது இல்லாமல் புத்துணர்ச்சி அடையலாம்.உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்தையும் இரசியுங்கள்! உடல் உருப்புகள் யாவும் அழகாக குறைகளில்லாமல் நலமுடன் படைக்கப்பட்டதை எண்ணி மகிழுங்கள்.
" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது "
என்ற ஔவையாரின் வாக்கை நினைத்துக் கொள்ளலாம்.
இனி தினமும் கண்ணாடி முன் நின்றுக்கொண்டடு சிரித்த முகத்துடன் I love myself, I love me என்று சொல்லிப்பாருங்கள் மாற்றம் நிச்சயம்.சாதிக்க நினைக்கும் மனிதருக்கு உருவமும்,அழகும்,உடல் நிறமும் முக்கியமில்லை.
சுயக்கட்டளையின் மற்றொறு பயிற்ச்சியைப் பார்ப்போம்:
ஒரு பேப்பரிலோ அல்லது நோட்டிலோ ஒரு பட்டியலாக ஒன்றன்பின் ஒன்றாக இவ்வாறு எழுதி வைத்துக் கொண்டு தினமும் வாய்விட்டு உரக்கப் படிப்பதனால் மாற்றத்தை உணர முடியும். இது போல செய்துப் பாருங்கள்:
1) நான் ஆரோக்கியமாக இருக்கேன்
2) நான் மகிழ்ச்சியாக உள்ளேன்
3) நான் நிம்மதியாக உணர்கிறேன் என்று சுயக்கட்டளைகளை நமக்குள் சொல்லிக்கொள்ளும் போது முலையில் தாக்கம் ஏற்படுத்தி நன்மைபயக்கும்.
இந்த "நான் "" I am " என்ற வார்த்தை அனைத்தைக்காட்டிலும் ஆற்றல் வாய்ந்தது.
உடல் நிலை நலிவுற்ற போதிலும் நான் ஆரோக்கியமாக இருக்கேன் நான் நல்லா இருக்கேன் Iam fine, Iam good என்ற auto suggestionனால் அவ்வாறாகவே மாறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
கவலைகள் சூழ்ந்திருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவுள்ளேன் என்ற எண்ணம் அசாத்திய சக்திபடைத்து கவலையை போக்கும் மருந்தாகிறது.
I am good,I am beautiful, Iam strong, I am awesome, I am happy,I am energetic, I am confident , I am unique, I am special, I am worthy, I am healthy, இன்னும் பல....
நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வாசகங்களே உயிர் பெற்று எண்ணம் வாயிலாக நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. சிந்தனையும் சரி பேசும் வார்த்தைகளும் சரி நல்லதாகவே இருத்தல் மிக அவசியம்.
இல்லை என்றால் அங்கு அவசியமற்ற சிந்தனைகள் உட்புகுந்து விடும் பிறகு அனைத்தும் சிக்கல்தான்.
மற்றவர் உன்னைப்பற்றி கூறும் கருத்துக்கள் யாவும் அபிப்பிராயமே தவிர உண்மையல்ல.
விமர்சனங்களை தாங்கும் மனமே அசாத்திய ஆற்றல் படைத்தது.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு
மணிமொழி மாறன்
Comments
Post a Comment