Posts

Showing posts from June, 2020

நன்றி செலுத்துதல் (Gratitude)

வாழ்வை நேர்மறையாக அனுக ஆயத்தமாகும் போது பலவகையான நல்ல பழக்கங்களை பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய பழக்கங்ளில் மிக முக்கியமான மற்றும் மிக எளிதில் செய்யக்கூடிய ஒன்று நன்றியுணர்வோடு இருத்தல். இதைதான் gratitude என்பார்கள்.அது என்ன நன்றியுணர்வு அவ்வளவு முக்கியமான ஒன்றா? நேர்மறையாக வாழ்வை அனுக நன்றி செலுத்துதல் தேவையா? என்று கேட்கலாம்.ஆம் நேர்மறை ஆற்றல்களை யாவும் நன்றியணர்வின் வாயிலாகவே நமது வாழ்வை அழகு படுத்துகிறது என்று கூறலாம். பய உணர்வு எப்படி எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றதோ அதுபோல நன்றி செலுத்துதல் எனப்படும் நன்றியுணர்வு வலிமையான நேர்மறை சக்தியை நம்முள் பிரசிவிக்கிறது. எண்ணங்கள் பற்றி பேசத் தொடங்கியபோதே நேர்மறையாக சிந்திக்க "இல்லாமை குறித்து வருந்தாதே இருப்பவைக் குறித்து ஆனந்தப்பட்டு மெச்சிக் கொள் "என்று பேசியிருப்பேன். நம்மிடம் இருக்கும் இல்லாமை கண்டு வருந்தி கொட்டிக்கிடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் மறந்திருப்போம். நம்மிடம் இருப்பதைக் கண்டு களிப்புரும் தருனத்தில் நன்றியுணர்வு பிறக்கிறது. When you start to count your good things you may definitely will ge...

அச்சம் தவீர்!!!

நாம் பிறந்ததில் இருந்து இன்றுவரை நம்மிடையே பழக்கப்பட்ட உணர்வுகளில் ஒன்று இந்த பயம்.மனிதனென்பவன் உணர்ச்சிக் குவியலின் அங்கமாகிறான்.சந்தோஷம், கோவம்,பொறாமை,வெறுப்பு,சோகம்,பதட்டம், ஆச்சரியமென்று பல வகை உணர்வுகளின் கையாளாகிறான். இருப்பினும் இத்தகைய உணர்வுகளில் அவன் அன்றாட வாழ்வில் அதிக அளவில் அவனை முடக்கிவிடும் உணர்வாக இருக்கிறது இந்த பயம். நம்மை பலதரப்பட்ட துன்பத்தில் சிக்கவிடுவதும் இந்த பயமே. அப்படி என்றால் பயம் கெட்டதா? இல்லை, பயமென்பது ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றது. பயம் என்பது நம்மை ஆபத்தில் இருந்து காக்கும் காவல் அரனாக பாதுகாக்க வல்லது. "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் "என்று வள்ளுவரும் "அச்சம் தவிர் "என்று பாரதியும் இரு துருவங்களாக விவரித்துள்ளனர் . இந்த பயம் என்னும் உணர்வு எங்கு இருந்து தோன்றுகிறது தெரியுமா? இது மனித மூளைபில் ஒரு சிறிய பகுதியில் இருந்துதான் தோன்றுகிறது. மூளையில் ஹைபோதளமஸ் அருகில் ஒரு சிறிய பாதாம் பருப்பு போல இருக்கும் இடத்தின் பெயர் "அமிக்டலா "( Amygdala) இந்த இடம் தான் மனிதனின் அனைத்து வகை உணர்ச்...