Posts

Showing posts from April, 2020

எண்ணமும் நாமும்

                    எண்ணமும் நாமும் பல மாதங்களாக எண்ணங்கள் குறித்தே என் எண்ணங்கள் இருந்து கொண்டிருக்கிறது.அதை நோக்கியே என் தேடல்கள் மற்றும் முகநூல் பதிவுகள் இருந்து வருகிறது.எண்ணங்கள் என்றால் என்ன?அதன் உயிர்ப்பு சக்தி என்ன?என்று என்னை நானே குழப்பிக்கிக் கொண்டதும் உண்டு.வாழ்வின் எல்லா நிலைகளிலும் எண்ணங்கள் நமது செயல்களின் வெளிப்பாடாக அமைகிறது.எண்ணங்கள் பற்றி நான் படித்து உணர்ந்த சிலவற்றை என் நண்பர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி.             எண்ணங்கள் குறித்து பேசத் தொடங்கும் முன்,சிந்தனை குறித்து நாம் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். "சிந்தனையே எண்ணங்களின் பிறப்பிடம்".சிந்தனைகளின் விளைவுகளே எண்ணங்களாக உறுவெடுக்கின்றன."சிந்தனை செய் மனமே"என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள்.அதன்படி மனதில் தோன்றும் சிந்தனைகள் நாளடைவில் உறுபெற்று எண்ணங்களாகின்றன.இந்த சிந்தனைக் குவியல்கள் எண்ணங்கள் என்னும் பெரும் மலையை உருவாக்கும் சக்தியுடையவை.சிந்தித்தல் யாதெனின் ஒரு செயல் அல்லது பொருளைக் குறித்தோ மூளையில் அசைப்போ...