மலடி

 

என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்?

என்னில் நானே ஒலிந்து கொண்டும்

என்னில் நானே சிதைந்துக் கொண்டும்

ஏன் இந்த நிலை ? என்ற வினாவோடும்

என்ன சொல்லி விவரிப்பேன் மற்றவரிடம்  என் நிலையை

சொன்னாலும் விடியுமா?

யாருக்கும் சொல்லாமல் மறைந்து ஓடுவதும்

பிறர் கண்ணில் படாமல் என்னை ஒலித்துக் கொள்வதுமாய் நான்.

கதவுகளை அடைத்துக் கொண்டு அழுது தீர்தாலும் தீரவில்லையே

 என் அழுகுரல் வெளியில் கேட்காமல் இருக்க கழிவரை குழாயை திரந்துவிட்டு

தண்ணீரோடு என் கண்ணீரும்...

நெஞ்சை அடைத்து கதரும் நேரத்திலும் என்னுடன் யாருமில்லை

நான் இருக்க விட்டதும் இல்லை

இங்கு நான் அழுவதும் என்னுடனே பேசிக்கொள்வதும் என்னுடனே

நிலை தடுமாறி  கிடக்கும் என்னிடம் யாரேனும் என்ன ஆச்சி ?என்று கேட்டால்

வாட்டமும் குழம்பிய மனதுடனும்

 நாம் நலமா என்று என்னை நானே கேட்பதுபோல

சிரித்துக் கொண்டே ஒன்னுமில்லையே என்ற பதில் அவர்களுக்காகவே

அந்த ஒன்னுமில்லை என்ற பதிலில்

எத்தனை ஒலிந்து கிடக்கும் என்பதை யாரரிவார்?

பிறரிடம் இருந்து பயந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும்

யாரேனும் என்னிடம் அதைப்பற்றி கேட்டு விடுவார்களோ?

அப்படி கேட்டால் தான் என்ன..

அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறேனா?

அல்லது அவர்களிடமிருந்து என்னை மீட்க ஓடுகிறேனா?

இப்போது யாருமில்லை என்னுடன் நான் மட்டுமே என்ற தனிமையில்

மற்றவரிடமிருந்து என்னை நானே மறைத்துக் கொள்கிறேன்

அவர்களையும் மறுக்க முடியாமல்

ஏச்சுப் பேச்சுக்களுக்கு வருந்தி அழுகிறேன்

 

என்ன வேண்டும் எனக்கு?

நானும் என் தாயை ஏக்கங்களோடு பார்க்க

 என்னை தேற்ற இயலாமல் தவிக்கும் அவளோடு என் நாட்கள்...

இருந்த விரதங்கள் யாவும் நீர்துப் போகி விடுமோ?

இனி எந்த சாமியிடம் கேட்பேன்?

செய்த பரிகாரங்கள் என்னவாயிற்று?

ஊருக்கு மட்டுமே உபதேசம்

ஆனால் நானோ....

எல்லா சாமியும் கைவிட்டதா...

எதைத் திண்றால் இந்த பித்தம் தீரும்

இனி அவர்கள் என்னை ஏளனம் செய்வார்களே

அய்யோ! நான் என்ன செய்வேன்

உன்னை மட்டுமே நினைத்து நித்தம் ஏங்கி கடந்த நாட்களை சுமந்த வலியை

கரைந்த நிமிடங்களை மீட்க முடியுமா?

கிடைக்குமோ கிடைக்காதோ என்ற

பயத்தோடும் பரிதவிக்கும் கண்ணீரோடு நான்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு எதையும் கடந்துவிடலாம் என்று

நிமிரும் போது

அவர்கள் என்னை "மலடி"என்று சொல்லிவிடுவார்களோ என்று

பயந்து மீண்டும் ஒலிந்துக் கொள்கிறேன்

மீண்டும் கதவடைத்து சத்தம் வெளியே கேட்கால் வாயடைத்து அழுகிறேன்

மீண்டும் அழுகிறேன் முன்பை விட அதிக துயரில்

தந்தையின் இளவரசியாக திரிந்த என்னைக்கண்டு

என் தந்தை நோகும்படி நானே என் விதியைக் கண்டு   நொந்துக் கொள்கிறேன்

துயர் அழுத்தும் போதெல்லாம் உன்னிடம் தான் அலாவி செல்லும் என் மனம்

நிஜத்தில் இல்லாத உன்னிடம்

 ஏங்கி தவித்து எப்போது வருவாய் சீக்கிரம் வந்துடேன் என்று புலம்புகிறேன்

உன்னையும் கடித்துக் கொள்கிறேன் என் இயலாமையால்

என்னை வாட்டும் இவர்களிடமிருந்து என்னை காக்க

நானே என்னை மடித்துக் கொள்ள துணிகிறேன்

ஒவ்வொரு நொடியும் செத்து தொலைவோம் என்று கத்தியால் 

கையை அருக்க துணியும் போதும், 

மனதின் காயம் உயிரை காவு கேட்கின்ற நேரத்தில்

எங்கோ ஒட்டிக் கொண்டிருக்கும்  

நம்பிக்கை சொல்லியது

அம்மாநான் உனக்காக வருவேனென்று !

எலும்புகள் உடைய இரத்தம் ஒழுக வலிகளின் வலிகளாக

நீ கிடைத்த போது

தவிப்புகள் யாவும் அடங்கினவே

சுகங்கள் யாவும் துளிர்த்தனவே!!!

இசையாகக் கிடைத்த நீ எனக்கு

பேரமுதே!

 

 

        _ மணிமொழி மாறன்

Comments

Popular posts from this blog

நன்றி செலுத்துதல் (Gratitude)

எண்ணமும் நாமும்

அச்சம் தவீர்!!!