அச்சம் தவீர்!!!
நாம் பிறந்ததில் இருந்து இன்றுவரை நம்மிடையே பழக்கப்பட்ட உணர்வுகளில் ஒன்று இந்த பயம்.மனிதனென்பவன் உணர்ச்சிக் குவியலின் அங்கமாகிறான்.சந்தோஷம், கோவம்,பொறாமை,வெறுப்பு,சோகம்,பதட்டம், ஆச்சரியமென்று பல வகை உணர்வுகளின் கையாளாகிறான். இருப்பினும் இத்தகைய உணர்வுகளில் அவன் அன்றாட வாழ்வில் அதிக அளவில் அவனை முடக்கிவிடும் உணர்வாக இருக்கிறது இந்த பயம். நம்மை பலதரப்பட்ட துன்பத்தில் சிக்கவிடுவதும் இந்த பயமே.
அப்படி என்றால் பயம் கெட்டதா?
இல்லை, பயமென்பது ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றது.
பயம் என்பது நம்மை ஆபத்தில் இருந்து காக்கும் காவல் அரனாக பாதுகாக்க வல்லது.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "என்று வள்ளுவரும் "அச்சம் தவிர் "என்று பாரதியும் இரு துருவங்களாக விவரித்துள்ளனர் .
இந்த பயம் என்னும் உணர்வு எங்கு இருந்து தோன்றுகிறது தெரியுமா?
இது மனித மூளைபில் ஒரு சிறிய பகுதியில் இருந்துதான் தோன்றுகிறது. மூளையில் ஹைபோதளமஸ் அருகில் ஒரு சிறிய பாதாம் பருப்பு போல இருக்கும் இடத்தின் பெயர் "அமிக்டலா "( Amygdala) இந்த இடம் தான் மனிதனின் அனைத்து வகை உணர்ச்சிகளின் பிறப்பிடமாக இருக்கிறது.கோபம்,பயம்,மகிழ்ச்சி போன்ற எல்லா வகை உணர்வுகளும் இங்கு இருந்துதான் பிறக்கிறது. பெரும்பாலான எதிர்மறை எண்ணங்கள் இங்கு இருந்துதான் தன் வேலையைக் காட்டுகின்றன.
இந்த பயம் எதனால் வருகின்றன? அதற்கான முலக்காரணம் என்ன ? பயம் பல சமயங்களில் எதிர்காலத்தை நோக்கி நாம் அச்சப்படும் ஒரு பிரம்மையே
அல்லது ஒருவித ஓன்னும் இல்லாத மாயை.
"Fear is just an illusion and also a wrong perception"
ஒரு பத்திரிக்கையின் ஆய்வின்படி பய உணர்வு பெரும்பாலும் எதிர்காலத்தை நோக்கி நாம் சிந்திக்கும் தருனத்தில் ஏற்படும் சந்தேகங்கள், நம்பிக்கையின்மை,அப்படி ஆகிவிடுமோ ? இப்படி நடந்தால் என்ன செய்வேன் அய்யோ!!! என்று ஏற்படும் எதிர்மறையான விளைவே.
நீங்களே சற்று நினைத்துப் பாருங்கள் நாம் என்றாவது ஒருநாள் எதற்காகவோ பயந்து படபடத்து போய் இருப்போம் அந்த நேரத்தில் இதய துடிப்பு பலமடங்காக கேட்டு இருக்கும் திக்கு திக்குன்னு இருக்கே என்று உணர்ந்திருப்பீர்கள். பின்பு ஒரு நாளோ இரண்டு நாளோ கழித்து 'சீ' இதுக்கா பயந்தோம் என்று ஆஸ்வாசப்பட்டுக் கொண்டிருப்போம். அப்போது இருந்த பயமானது காணமல் போய் இருக்கும். நாம் நம் பயத்தைக் நினைத்து சிரித்துக்கொள்வோம்.நாம் உருவாக்கும் இல்லாத கற்பனைக் கதையே பயமென்பது.இந்த கதையில் நாமே மாட்டிக்கொண்டு துன்பப்படுவோம்.
இதுதவிர பயமானது பதட்டம், கவலை,மன இருக்கம், செயலிழந்து காணப்படுதல்,சோர்வு,முடக்கம், இன்னும் சற்று உச்சத்தில் சென்று தற்கொலைகளையும் தூண்ட வல்ல சீர்கேடாக இருக்கிறது.
அச்சம் சில நேரங்களில் phobiaவாகவும் maniaவாகவும் உளவியல் அளவில் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Fear is the leading cause of phobias
இரவு நேர பேய் பிசாசு பயம் , பாம்பை கண்டு,தண்ணீரைக் கண்டு,மரண பயம்,இரத்தத்தை கண்டு பயம்,இடியின் சத்தம் கேட்டு பயம், என்று உளவியல் ரீதியாக குறிப்பிட்ட பொருள் மீதோ அல்லது சில சுழல் மீதோ ஏற்படும் பதட்டமும் நடுக்கமும் நாளடைவில் phobiaக்களை உருவாக்குகின்றன.
பயத்தை தவிர்க்க அப்படி ஆகிவிடுமோ? இப்படி ஆகிவிடுமோ? என்று அனாவசிய சிந்தனையில் மூழ்காமல் நல்லதே நடக்கும் என்று உங்களுக்கு அந்த எதிர்காலத்தில் என்னத்தேவையோ அதை மட்டும் நினைத்துவிட்டு போங்கள்! தேவையற்ற சந்தேகங்கள் வேண்டாமே! இல்லை அப்படி முடியவில்லை என்றால் தன்னம்பிக்கை இழக்காமல் நம்பிக்கையோடு நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள் ! நிகழ்கால கடமைகளை செம்மையாக செய்யும் போது எதிர்காலம் நினைத்து பயமும் நடுக்கமும் எழாது.
பய உணர்வு எதிர்மறையானதே!
நம் எதிர்கால இலட்சியக் கனவை பழாக்கக் கூடியது.தனது இலட்சிய வேட்கையில் சீரிப்பாய நினைப்பவர் தான் விரும்பும் வெற்றி என்னும் நாற்காலியில் அமரவிரும்புபவர் முதலில் இந்த அச்சமென்னும் மடைமையை அழித்தே தீர வேண்டும்.
செல்லும் பாதையில் தடைகள் வரதான் செய்யும்
உன் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படலாம் ஆனால் உன்னைக் கண்டு நீயே ஏளனமாக நினைத்து சந்தேகிக்காதே உன்னால் முடியாதோ என்று!
அச்சம் தவீர்......
"நீயே உன் வாழ்க்கை என்னும் கோட்டையின் அரசன் "
Create your own dynasty
the obstacles may come to your path don't coward be brave and face the fear.
முடியாது என்று முடங்கி போகாதே
அஞ்சி நடுங்கி பிழைத்திட வேண்டா
கொடுந்துண்பமும் உன்னைக் கண்டு நடுங்கும் துணிந்து செல்!!!
அச்சமென்னும் மாயை உடைந்திட அச்சமின்றி நிமிர்ந்து செல்...
கனெலன்ற நம்பிக்கை கொண்டு சுட்டெரி அம் மாயை நடுங்க!!!
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு மணிமொழி மாறன்
அப்படி என்றால் பயம் கெட்டதா?
இல்லை, பயமென்பது ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றது.
பயம் என்பது நம்மை ஆபத்தில் இருந்து காக்கும் காவல் அரனாக பாதுகாக்க வல்லது.
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "என்று வள்ளுவரும் "அச்சம் தவிர் "என்று பாரதியும் இரு துருவங்களாக விவரித்துள்ளனர் .
இந்த பயம் என்னும் உணர்வு எங்கு இருந்து தோன்றுகிறது தெரியுமா?
இது மனித மூளைபில் ஒரு சிறிய பகுதியில் இருந்துதான் தோன்றுகிறது. மூளையில் ஹைபோதளமஸ் அருகில் ஒரு சிறிய பாதாம் பருப்பு போல இருக்கும் இடத்தின் பெயர் "அமிக்டலா "( Amygdala) இந்த இடம் தான் மனிதனின் அனைத்து வகை உணர்ச்சிகளின் பிறப்பிடமாக இருக்கிறது.கோபம்,பயம்,மகிழ்ச்சி போன்ற எல்லா வகை உணர்வுகளும் இங்கு இருந்துதான் பிறக்கிறது. பெரும்பாலான எதிர்மறை எண்ணங்கள் இங்கு இருந்துதான் தன் வேலையைக் காட்டுகின்றன.
இந்த பயம் எதனால் வருகின்றன? அதற்கான முலக்காரணம் என்ன ? பயம் பல சமயங்களில் எதிர்காலத்தை நோக்கி நாம் அச்சப்படும் ஒரு பிரம்மையே
அல்லது ஒருவித ஓன்னும் இல்லாத மாயை.
"Fear is just an illusion and also a wrong perception"
ஒரு பத்திரிக்கையின் ஆய்வின்படி பய உணர்வு பெரும்பாலும் எதிர்காலத்தை நோக்கி நாம் சிந்திக்கும் தருனத்தில் ஏற்படும் சந்தேகங்கள், நம்பிக்கையின்மை,அப்படி ஆகிவிடுமோ ? இப்படி நடந்தால் என்ன செய்வேன் அய்யோ!!! என்று ஏற்படும் எதிர்மறையான விளைவே.
நீங்களே சற்று நினைத்துப் பாருங்கள் நாம் என்றாவது ஒருநாள் எதற்காகவோ பயந்து படபடத்து போய் இருப்போம் அந்த நேரத்தில் இதய துடிப்பு பலமடங்காக கேட்டு இருக்கும் திக்கு திக்குன்னு இருக்கே என்று உணர்ந்திருப்பீர்கள். பின்பு ஒரு நாளோ இரண்டு நாளோ கழித்து 'சீ' இதுக்கா பயந்தோம் என்று ஆஸ்வாசப்பட்டுக் கொண்டிருப்போம். அப்போது இருந்த பயமானது காணமல் போய் இருக்கும். நாம் நம் பயத்தைக் நினைத்து சிரித்துக்கொள்வோம்.நாம் உருவாக்கும் இல்லாத கற்பனைக் கதையே பயமென்பது.இந்த கதையில் நாமே மாட்டிக்கொண்டு துன்பப்படுவோம்.
இதுதவிர பயமானது பதட்டம், கவலை,மன இருக்கம், செயலிழந்து காணப்படுதல்,சோர்வு,முடக்கம், இன்னும் சற்று உச்சத்தில் சென்று தற்கொலைகளையும் தூண்ட வல்ல சீர்கேடாக இருக்கிறது.
அச்சம் சில நேரங்களில் phobiaவாகவும் maniaவாகவும் உளவியல் அளவில் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Fear is the leading cause of phobias
இரவு நேர பேய் பிசாசு பயம் , பாம்பை கண்டு,தண்ணீரைக் கண்டு,மரண பயம்,இரத்தத்தை கண்டு பயம்,இடியின் சத்தம் கேட்டு பயம், என்று உளவியல் ரீதியாக குறிப்பிட்ட பொருள் மீதோ அல்லது சில சுழல் மீதோ ஏற்படும் பதட்டமும் நடுக்கமும் நாளடைவில் phobiaக்களை உருவாக்குகின்றன.
பயத்தை தவிர்க்க அப்படி ஆகிவிடுமோ? இப்படி ஆகிவிடுமோ? என்று அனாவசிய சிந்தனையில் மூழ்காமல் நல்லதே நடக்கும் என்று உங்களுக்கு அந்த எதிர்காலத்தில் என்னத்தேவையோ அதை மட்டும் நினைத்துவிட்டு போங்கள்! தேவையற்ற சந்தேகங்கள் வேண்டாமே! இல்லை அப்படி முடியவில்லை என்றால் தன்னம்பிக்கை இழக்காமல் நம்பிக்கையோடு நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள் ! நிகழ்கால கடமைகளை செம்மையாக செய்யும் போது எதிர்காலம் நினைத்து பயமும் நடுக்கமும் எழாது.
பய உணர்வு எதிர்மறையானதே!
நம் எதிர்கால இலட்சியக் கனவை பழாக்கக் கூடியது.தனது இலட்சிய வேட்கையில் சீரிப்பாய நினைப்பவர் தான் விரும்பும் வெற்றி என்னும் நாற்காலியில் அமரவிரும்புபவர் முதலில் இந்த அச்சமென்னும் மடைமையை அழித்தே தீர வேண்டும்.
செல்லும் பாதையில் தடைகள் வரதான் செய்யும்
உன் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படலாம் ஆனால் உன்னைக் கண்டு நீயே ஏளனமாக நினைத்து சந்தேகிக்காதே உன்னால் முடியாதோ என்று!
அச்சம் தவீர்......
"நீயே உன் வாழ்க்கை என்னும் கோட்டையின் அரசன் "
Create your own dynasty
the obstacles may come to your path don't coward be brave and face the fear.
முடியாது என்று முடங்கி போகாதே
அஞ்சி நடுங்கி பிழைத்திட வேண்டா
கொடுந்துண்பமும் உன்னைக் கண்டு நடுங்கும் துணிந்து செல்!!!
அச்சமென்னும் மாயை உடைந்திட அச்சமின்றி நிமிர்ந்து செல்...
கனெலன்ற நம்பிக்கை கொண்டு சுட்டெரி அம் மாயை நடுங்க!!!
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு மணிமொழி மாறன்
Comments
Post a Comment