எண்ணமும் நாமும்

                    எண்ணமும் நாமும்
பல மாதங்களாக எண்ணங்கள் குறித்தே என் எண்ணங்கள் இருந்து கொண்டிருக்கிறது.அதை நோக்கியே என் தேடல்கள் மற்றும் முகநூல் பதிவுகள் இருந்து வருகிறது.எண்ணங்கள் என்றால் என்ன?அதன் உயிர்ப்பு சக்தி என்ன?என்று என்னை நானே குழப்பிக்கிக் கொண்டதும் உண்டு.வாழ்வின் எல்லா நிலைகளிலும் எண்ணங்கள் நமது செயல்களின் வெளிப்பாடாக அமைகிறது.எண்ணங்கள் பற்றி நான் படித்து உணர்ந்த சிலவற்றை என் நண்பர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி.
            எண்ணங்கள் குறித்து பேசத் தொடங்கும் முன்,சிந்தனை குறித்து நாம் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
"சிந்தனையே எண்ணங்களின் பிறப்பிடம்".சிந்தனைகளின் விளைவுகளே எண்ணங்களாக உறுவெடுக்கின்றன."சிந்தனை செய் மனமே"என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள்.அதன்படி மனதில் தோன்றும் சிந்தனைகள் நாளடைவில் உறுபெற்று எண்ணங்களாகின்றன.இந்த சிந்தனைக் குவியல்கள் எண்ணங்கள் என்னும் பெரும் மலையை உருவாக்கும் சக்தியுடையவை.சிந்தித்தல் யாதெனின் ஒரு செயல் அல்லது பொருளைக் குறித்தோ மூளையில் அசைப்போட்டுக் கொண்டிருத்தல்.இதுவே நாளடைவில் எண்ணங்களாக பிரதிபலிக்கின்றன."எண்ணங்கள் நம்மை செதுக்கும் உளிகளாகின்றன".எண்ணம் போல்தான் வாழ்க்கை என்று பலர் சொல்ல நாம் கேட்டு இருப்போம்.இது உண்மையே.இது சாத்தியம்தானா?வெறும் எண்ணங்களைக் கொண்டு நாம் என்ன சாதிக்க இயலும்? சாதிக்கனும் என்ற எண்ணமே சாதனையின் முதல் வெற்றிப் படி என்றே கூறலாம்.இந்த எண்ணங்கள் இரு வகைகளாக அதன் பங்கை அளிக்கின்றன.அதை ஆக்க சக்தியாக பயன்படுத்தினால் விளையும் நன்மை அளப்பெரியது.மறுப்புறம்  அதை சரியாக பயன்படுத்தாவிடின் பலன் தெரியாது.எண்ணங்களால் நமது வாழ்வை மேன்மையாக்க முடியும் என்று என்னால் நிச்சயமாக கூறமுடியும்.அதை உணர்வது நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.
            எண்ணங்களில் நேர்மறை- எதிர்மறை என்ற இரு துருவங்கள் உண்டு.இதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதற்கு நமது அவநம்பிக்கை எனும் நம்பிக்கை இன்மையே முக்கிய காரணம்.இந்த இரு எண்ணங்களை ஆங்கிலத்தில் Positivity and Negativity என்பார்கள்.Positivity என்பது நேர்மறை சிந்தனைகளைக் கொண்ட Positive minded people மற்றும் Negativity  என்பது எதிர்மறை சிந்தனைகளைக் கொண்ட Negative minded people-ஐ குறிக்கும்.optimist and Pesimist என்றும் அழைக்கப்படும். இத்தகைய எண்ணங்கள் தான் ஒரு மனிதனை தீர்மானிக்கின்றன.ஒருவன் தைரியமாக சவால்களை கடந்து வெற்றி கனியைச் சுவைப்பதும்,மற்றொருவன் நம்பிக்கை இழந்து தன்னை தாழ்த்திக்கொள்வதிலும் இந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கின்றன. தொடர்ந்து ஒரு செயலைக் குறித்து நல்ல முறையில் சிந்திக்க தொடங்கினால் அதன் விளைவாக நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும்.அத்தகைய எண்ணங்களால் நம் வாழ்வை வெற்றிப்பாதையில் வழி நடத்த முடியும்.இது 'சாத்தியமே இல்ல', இது 'எப்படி முடியும்', இது 'நடக்கவே வாய்பில்லை' its Impossible  என்று சொல்வதைவிட' ஏன் இது முடியாது? இது என்ன கம்பசூத்தரமா? அவர்களால் இதை செய்ய முடியுமென்றால் ஏன் என்னால் முடியாது?  I think its possible என்று சொல்லிப் பழகுங்கள் கட்டாயமாக you can make it possible உங்களால் முடியும். 'முடியாது' என்று சொல்லிக்கொண்டே இருத்தல்  முயற்சிக்கு முட்டுக்கட்டை ஆகாதா?.. உங்களின் எண்ணங்களே செயல்களின் அச்சாணி. இந்த நேர்மறை எண்ணம் நம்மை தூய்மை செய்யும் காரணியாகும். நம்மிடம் உள்ள இருளை, அவ நம்பிக்கையை, எதிர்மறை எண்ணங்களை இந்த நேர்மரை எண்ணங்களை வாயிலாக வீழ்த்திவிட முடியும்.
            எண்ணங்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாது. சரி தவறு, நல்லவை கெட்டவை அனைத்தும் எண்ணங்களே! "நிறைக் கண்களுக்கு குறை தெரியாது குறைக் கண்களுக்கு நிறை தெரியாது" இதுவே இருவேரு எண்ணங்களின் பிரதிபலிப்பு. Positivity எதிலிருந்து தொடங்குகிறது? நம்மில் நாம் கொள்ளும் நம்பிக்கையில் பிரசவிக்கின்றன."என்னால் முடியும்"" இது சாத்தியமே" என்று சொல்லிப்பழகும் போது அந்த விஷயம் சாத்தியமாகின்றது.
நம்பிக்கை நம்மை மட்டும் இல்லாமல்  அது பிறரையும் உத்வேகப்படுத்தும். உற்சாகப்படுத்தும். பிறரிடன் நம்பிக்கை வாசத்தை பரப்புவதும் ஒரு கலை.உங்களிடம் உங்கள் நண்பர்கள் யாரேனும் எப்படி இருக்க ? என்று கேட்டால் ஒரு புன்னகையால் சூப்பராக இருக்கிறேன் என்று சொல்லிப்பாருக்களேன் ! positivity இங்கிருந்துதான் பிறக்கிறது ஒரு சின்ன ரோஜா மலரைப்போல.நீங்க எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் உடல் சரியில்லாம மனஉளைச்சளால் ஆனால் யாரேனும் ஒருவர் how  are you? என்று கேட்டால்  iam super,i hope that you too going good என்று சொல்லும் போது நம் இன்னல்களை மறந்து நாம் புத்துணர்ச்சி அடையலாம் பிறரையும் நலமாக வைத்துக் கொள்ளலாம்.அதைவிட்டுப்புட்டு ஏன் கதைய ஏன்பா கேக்கற ஒரே மோசமான நிலைமை , எரிச்சலா இருக்குனு ஆரம்பிக்காதிங்க.நமது எண்ணங்கள் பிறரை தாக்கவும் வாய்ப்பு இருக்கு.மனம்விட்டு புலம்பி தீர்க்க வேண்டியதை நெருங்கிய நட்பு யாரேனும்  இருப்பின் அவரிடம் மட்டுமே சொல்லி கொட்டி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுங்கள்.
சக நண்பர்களையும் சரி பணிபுரிவோர்களையும் சரி அவர்களின் செயல்களை பாராட்டி மகிழ்விக்கலாம்.  இதுவும் ஒரு வகை spread positivity தான்.
தொடர்ந்து  auto suggestion நமக்கு நாமே செய்துக் கொள்வதில் பயன் ஏராலம். இவ்வகை  auto suggestionனால் நம் நிலையை மாற்றி அமைத்து கொள்ளலாம். நான் நல்லா இருக்கேன் iam super, iam good இப்படிலாம் சொல்லும் போது நாம் அவ்வாறே மாறுகிறோம்.எண்ணங்கள் குறித்த புத்தங்களில் நேர்மறை எண்ணங்களை பற்றி குறிப்பிடுகையில் கஷ்டங்களை எண்ணிக் கொண்டு இல்லாமல் முதலில் இருப்பதை எண்ணி பெறுமை கொள்ளுக்கள் மெச்சிக்கொள்ளுங்கள் அவை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.இது என்னிடத்தில் இல்லையே என்று நொந்து போகாமல் நம்மிடம் இருப்பதை சற்று கவனிக்கலாமே.என்னடா வாழ்கை இது  புடிச்ச மாறியே இல்ல என்று நோகவேண்டா! பிறர் பசியில் வாடும் போது ஒரு வாய் சோறு கிடைக்காமல்  பலர் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது இங்கு ருசியான உணவில்லை என்பவனுக்கு இவர்களின் நிலை அறியா! மாளிகையில் குடி இருப்பனுக்கு மழையிலும் ரோட்டு ஓரத்தில் தஞ்சம் புகுவோரின் வலி அறியா!! வருடம் தவராது பண்டிகளுக்கு புத்தாடை தேடும் கண்களுக்கு மாற்று துணிக்கிக்கூட  வழி இல்லாமல் திரிவோரின் நிலை தெரியுமா? பலர் நோயால் மாண்டுபோக நல்ல உடல் நிலை வாய்கப்பட்டதே!! இருக்கும் இருப்பவை அனைத்தையும் நேசியுங்கள்
நம்மிடம் இவை அனைத்தும் இருக்கிறது ஆனால் இவை அனைத்தையும் மறந்து மனம் இல்லாததை தேடுகிறது. இருக்கிறவற்றை நினைத்து மகிழும் போது  இல்லாமை இல்லாமல் போய்விடும்.இதைதான்  count your blessings என்று சொல்வார்கள்! இதுதான் நேர்மறை எண்ணங்களின் உட்கரு.என்னை நானே தேற்றிக்கொள்ளும் வாசகமும் கூட. 
நம் தாத்தா வள்ளுவன் அப்போதே சொல்லி வச்சாரே எல்லார்க்கும் முன்னாடி
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
தின்னியர் ஆகப் பெறின்".நமது அப்துல்கலாம் ஐயாவும் இந்த குறலைதான் தனது வாழ்வின் அஸ்திவாரம் என்று ஒருமுறை பதிவிட்டுள்ளார்.ஒரு எண்ணம் சிறப்பானதாக இருத்தல் அவசியமாகிறது அது சாதனையின் வழியாக அமைகிறது.  "Big thinking leads to success"
உள்ளுவதெள்லாம் உயர்வுள்ளல் வேண்டும்.செய்ய துடிக்கும் செயலின்கண் காதல் கொண்டு அதனோடு இந்த நேர்மறை எண்ணங்களையும் முயர்ச்சியையும் உலவவிட்டால் அனைத்தும் வசப்படும்.

                      என்றும் அன்புடன் நம்பிக்கையின் வாசத்தை பரப்பும் மனதோடு
 மணிமொழி மாறன்

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நன்றி செலுத்துதல் (Gratitude)

அச்சம் தவீர்!!!