Posts

விழித்திரு

 வகுப்பறை சற்று சலசலப்பாக இருந்தது. மாணவர்களின் அறட்டைகள் சைலன்ஸ் என்று பென்சை தட்டிய படி ஆசிரியர் குறலோடு.அவங்க வர நேரத்துல இப்படி சத்தம் போட்டு என் மாணத்த வாங்காதிங்க இப்படி சத்தம் போட்டுக் கிட்டே இருந்தா எல்லாரையும் வெளிய தொரத்திடுவே பாத்துக் கோங்க அப்பறம் நீங்கலாச்சி பிரின்ஸ்பலாச்சி. என்று அந்த ஆசிரியர் அதட்டிக் கொண்டு இருக்கையில் பிரின்ஸ்பலோடு ஒருவர்  சற்றுத் தாங்கிய படி நடந்து வந்தார். பிரின்ஸ்பல் வந்ததும் மாணவர்கள் அமைதியாகி விட்டனர். இது எப்பவும் நடக்குற நிகழ்வுதானே. வகுப்பறை முழுவதும் சலனமில்லாமல் இருக்கையில் பிரின்ஸ்பலோட உரை தொடங்கியது. டியர் ஸ்டுடண்ஸ் இன்னிக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும்னு நம்பறேன். இவர் பெயர் மாணிக்கம் உங்க கிட்ட உரையாட வந்திருக்காரு .என்று வந்தவரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு போய்டார். இப்ப வந்த அந்த நபர் யாரு எதுக்கு வந்திருக்காரு என்ன பேசப் போராருனு பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில். மாணிக்கம் சிறிது நேரம் எதுவும் பேசாமல் வகுப்பறையை சூற்றி பார்வையிட்டார். சட்டென்று அவர் பார்வை  இரண்டாவது பெண்ச் ஒரமாக அமர்ந்திருந்த ஒரு மானவியின் ம...

டாக்டர்.அம்பேத்கரின் சுயசரிதை

Image
 தீண்டாமை ஒரு பாவச்செயல்  தீண்டாமை ஒரு பெருங்குற்றம்  தீண்டாமை ஒரு மனித தன்மையற்றச் செயல்  ஏன் இத்தனை பீடிக்கைகள்? அப்படி அந்த கோரமான தீண்டாமை என்றால் என்ன?  சாதியக் கொடுமைகளால் இவன் மேல் சாதி இவன் கீழ் சாதி என்று மனிதன் பிளவு பட்டு, அவர்களே வகுத்துக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளின் ஈனமான செயலே இந்த தீண்டாமை. மனித இனமென்ற ஒறே இனம் தான் தன்னைப் போன்ற சக மனிதனையும் சமமாககப் பாராமல் இவன் கீழ் சாதி என்று சொல்லி விலங்கைக் காட்டிலும் மோசமான சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தது. ஒருவன் தாழ்த்த வகுப்பை சேர்ந்தவன் என தெரிந்தால் அவர்களுக்கு அல்லல் பாடுதான் .இந்த மேல் சாதி  மிருகங்களுக்கு வெள்ளையனே மேல்.  தீண்டாமையை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்து இருந்திருக்கும்? ஒவ்வொரு முறையும் அவர்கள் மறுக்கப்படும் போதும் ஒடுக்கப்படும் போதும் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏத்தனையோ! அன்றும் இன்றும் சாதியின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. தாழ்த்தப் பட்டோர் என்பதால் அவர்களைத் தொடக்கூடாது,அவர்கள் கைப்பட்டால் தீட்டு ,என்பதுப் போன்ற கேவலாமான செயல்கள் நம் நாட்டில் அதிகமாக அரங்கேறி ...

மலடி

  என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? என்னில் நானே ஒலிந்து கொண்டும் என்னில் நானே சிதைந்துக் கொண்டும் ஏன் இந்த நிலை ? என்ற வினாவோடும் என்ன சொல்லி விவரிப்பேன் மற்றவரிடம்    என் நிலையை சொன்னாலும் விடியுமா ? யா ரு க் கு ம்  சொல்லாமல்  மறைந்து   ஓடுவதும் பிறர் கண்ணில் படாமல் என்னை ஒலித்துக் கொள்வதுமாய் நான். கதவுகளை அடைத்துக் கொண்டு அழுது தீர்தாலும் தீரவில்லையே   என் அழுகுரல் வெளியில் கேட்காமல் இருக்க கழிவரை குழாயை திரந்துவிட்டு தண்ணீரோடு என் கண்ணீரும்... நெஞ்சை அடைத்து கதரும் நேரத்திலும் என்னுடன் யாருமில்லை நான் இருக்க விட்டதும் இல்லை இங்கு நான் அழுவதும் என்னுடனே பேசிக்கொள்வதும் என்னுடனே நிலை தடுமாறி   கிடக்கும் என்னிடம் யாரேனும் என்ன ஆச்சி  ? என்று கேட்டால் வாட்டமும் குழம்பிய மனதுடனும்   நாம் நலமா என்று என்னை நானே கேட்பதுபோல சிரித்துக் கொண்டே ஒன்னுமில்லையே என்ற பதில் அவர்களுக்காகவே அந்த ஒன்னுமில்லை என்ற பதிலில் எத்தனை ...

நன்றி செலுத்துதல் (Gratitude)

வாழ்வை நேர்மறையாக அனுக ஆயத்தமாகும் போது பலவகையான நல்ல பழக்கங்களை பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய பழக்கங்ளில் மிக முக்கியமான மற்றும் மிக எளிதில் செய்யக்கூடிய ஒன்று நன்றியுணர்வோடு இருத்தல். இதைதான் gratitude என்பார்கள்.அது என்ன நன்றியுணர்வு அவ்வளவு முக்கியமான ஒன்றா? நேர்மறையாக வாழ்வை அனுக நன்றி செலுத்துதல் தேவையா? என்று கேட்கலாம்.ஆம் நேர்மறை ஆற்றல்களை யாவும் நன்றியணர்வின் வாயிலாகவே நமது வாழ்வை அழகு படுத்துகிறது என்று கூறலாம். பய உணர்வு எப்படி எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றதோ அதுபோல நன்றி செலுத்துதல் எனப்படும் நன்றியுணர்வு வலிமையான நேர்மறை சக்தியை நம்முள் பிரசிவிக்கிறது. எண்ணங்கள் பற்றி பேசத் தொடங்கியபோதே நேர்மறையாக சிந்திக்க "இல்லாமை குறித்து வருந்தாதே இருப்பவைக் குறித்து ஆனந்தப்பட்டு மெச்சிக் கொள் "என்று பேசியிருப்பேன். நம்மிடம் இருக்கும் இல்லாமை கண்டு வருந்தி கொட்டிக்கிடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் மறந்திருப்போம். நம்மிடம் இருப்பதைக் கண்டு களிப்புரும் தருனத்தில் நன்றியுணர்வு பிறக்கிறது. When you start to count your good things you may definitely will ge...

அச்சம் தவீர்!!!

நாம் பிறந்ததில் இருந்து இன்றுவரை நம்மிடையே பழக்கப்பட்ட உணர்வுகளில் ஒன்று இந்த பயம்.மனிதனென்பவன் உணர்ச்சிக் குவியலின் அங்கமாகிறான்.சந்தோஷம், கோவம்,பொறாமை,வெறுப்பு,சோகம்,பதட்டம், ஆச்சரியமென்று பல வகை உணர்வுகளின் கையாளாகிறான். இருப்பினும் இத்தகைய உணர்வுகளில் அவன் அன்றாட வாழ்வில் அதிக அளவில் அவனை முடக்கிவிடும் உணர்வாக இருக்கிறது இந்த பயம். நம்மை பலதரப்பட்ட துன்பத்தில் சிக்கவிடுவதும் இந்த பயமே. அப்படி என்றால் பயம் கெட்டதா? இல்லை, பயமென்பது ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றது. பயம் என்பது நம்மை ஆபத்தில் இருந்து காக்கும் காவல் அரனாக பாதுகாக்க வல்லது. "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் "என்று வள்ளுவரும் "அச்சம் தவிர் "என்று பாரதியும் இரு துருவங்களாக விவரித்துள்ளனர் . இந்த பயம் என்னும் உணர்வு எங்கு இருந்து தோன்றுகிறது தெரியுமா? இது மனித மூளைபில் ஒரு சிறிய பகுதியில் இருந்துதான் தோன்றுகிறது. மூளையில் ஹைபோதளமஸ் அருகில் ஒரு சிறிய பாதாம் பருப்பு போல இருக்கும் இடத்தின் பெயர் "அமிக்டலா "( Amygdala) இந்த இடம் தான் மனிதனின் அனைத்து வகை உணர்ச்...

தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!!!

தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!  வாழ்வில் வெற்றி என்பது எது?  சகல சொபாக்கியங்களையும் பெறுவதா? நினைத்ததை அடைந்தோம் என்ற பெருமிதமா? வெற்றி என்பது எதைக் குறிக்கும்? முட்கள் நிறம்பிய பாதையிலும் இலக்கை நோக்கி பயணிக்கும் தருணத்தில் இன்னல்களை பொருட்படுத்தாது லட்சிய திசையில் நம்பிகையின் கரம்கோர்த்து நான் வெல்வேன்!இந்த முட்பாதைகள் யாவும் எனக்கு சிவப்பு கம்பளங்களாக காத்துக் கிடக்கின்றன ! இத்தகைய பாதையை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிரேன் என்று நெஞ்சில் துணிவோடு புன்னகையுடன் முன்னோக்கி செல்வதே வெற்றி. இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல இடையுராக வரும் தோல்வியைக் கண்டு துவழாமல் மீண்டும் மீண்டும் மனவலிமை இழக்காமல் முயற்சி செய்வதே ஒரு வெற்றி தான்.இலக்குக்காக முயற்சி செய்யும் போது இலக்கை அடைந்தே தீருவேன் என்று முழுமனதோடு செயல்படுவதும் வெற்றிதான். வாழ்வை சலிப்பில்லாமல் மகிழ்ச்சியோடு அனுகுவதும் ஒரு வெற்றி தான். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வை இரசிப்பதும் வெற்றிதான். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கண்டு சலனம் கோள்ளாமல் ஏற்றுக்கொள்வதும் வெற்றிதான். வாழ்வின் சாதனை அடையும் வழி எதுவென்று பார்த்தால் மகி...