டாக்டர்.அம்பேத்கரின் சுயசரிதை

தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனித தன்மையற்றச் செயல் ஏன் இத்தனை பீடிக்கைகள்? அப்படி அந்த கோரமான தீண்டாமை என்றால் என்ன? சாதியக் கொடுமைகளால் இவன் மேல் சாதி இவன் கீழ் சாதி என்று மனிதன் பிளவு பட்டு, அவர்களே வகுத்துக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளின் ஈனமான செயலே இந்த தீண்டாமை. மனித இனமென்ற ஒறே இனம் தான் தன்னைப் போன்ற சக மனிதனையும் சமமாககப் பாராமல் இவன் கீழ் சாதி என்று சொல்லி விலங்கைக் காட்டிலும் மோசமான சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தது. ஒருவன் தாழ்த்த வகுப்பை சேர்ந்தவன் என தெரிந்தால் அவர்களுக்கு அல்லல் பாடுதான் .இந்த மேல் சாதி மிருகங்களுக்கு வெள்ளையனே மேல். தீண்டாமையை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்து இருந்திருக்கும்? ஒவ்வொரு முறையும் அவர்கள் மறுக்கப்படும் போதும் ஒடுக்கப்படும் போதும் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏத்தனையோ! அன்றும் இன்றும் சாதியின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. தாழ்த்தப் பட்டோர் என்பதால் அவர்களைத் தொடக்கூடாது,அவர்கள் கைப்பட்டால் தீட்டு ,என்பதுப் போன்ற கேவலாமான செயல்கள் நம் நாட்டில் அதிகமாக அரங்கேறி ...