Posts

Showing posts from January, 2021

டாக்டர்.அம்பேத்கரின் சுயசரிதை

Image
 தீண்டாமை ஒரு பாவச்செயல்  தீண்டாமை ஒரு பெருங்குற்றம்  தீண்டாமை ஒரு மனித தன்மையற்றச் செயல்  ஏன் இத்தனை பீடிக்கைகள்? அப்படி அந்த கோரமான தீண்டாமை என்றால் என்ன?  சாதியக் கொடுமைகளால் இவன் மேல் சாதி இவன் கீழ் சாதி என்று மனிதன் பிளவு பட்டு, அவர்களே வகுத்துக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளின் ஈனமான செயலே இந்த தீண்டாமை. மனித இனமென்ற ஒறே இனம் தான் தன்னைப் போன்ற சக மனிதனையும் சமமாககப் பாராமல் இவன் கீழ் சாதி என்று சொல்லி விலங்கைக் காட்டிலும் மோசமான சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தது. ஒருவன் தாழ்த்த வகுப்பை சேர்ந்தவன் என தெரிந்தால் அவர்களுக்கு அல்லல் பாடுதான் .இந்த மேல் சாதி  மிருகங்களுக்கு வெள்ளையனே மேல்.  தீண்டாமையை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்து இருந்திருக்கும்? ஒவ்வொரு முறையும் அவர்கள் மறுக்கப்படும் போதும் ஒடுக்கப்படும் போதும் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஏத்தனையோ! அன்றும் இன்றும் சாதியின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. தாழ்த்தப் பட்டோர் என்பதால் அவர்களைத் தொடக்கூடாது,அவர்கள் கைப்பட்டால் தீட்டு ,என்பதுப் போன்ற கேவலாமான செயல்கள் நம் நாட்டில் அதிகமாக அரங்கேறி ...

மலடி

  என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? என்னில் நானே ஒலிந்து கொண்டும் என்னில் நானே சிதைந்துக் கொண்டும் ஏன் இந்த நிலை ? என்ற வினாவோடும் என்ன சொல்லி விவரிப்பேன் மற்றவரிடம்    என் நிலையை சொன்னாலும் விடியுமா ? யா ரு க் கு ம்  சொல்லாமல்  மறைந்து   ஓடுவதும் பிறர் கண்ணில் படாமல் என்னை ஒலித்துக் கொள்வதுமாய் நான். கதவுகளை அடைத்துக் கொண்டு அழுது தீர்தாலும் தீரவில்லையே   என் அழுகுரல் வெளியில் கேட்காமல் இருக்க கழிவரை குழாயை திரந்துவிட்டு தண்ணீரோடு என் கண்ணீரும்... நெஞ்சை அடைத்து கதரும் நேரத்திலும் என்னுடன் யாருமில்லை நான் இருக்க விட்டதும் இல்லை இங்கு நான் அழுவதும் என்னுடனே பேசிக்கொள்வதும் என்னுடனே நிலை தடுமாறி   கிடக்கும் என்னிடம் யாரேனும் என்ன ஆச்சி  ? என்று கேட்டால் வாட்டமும் குழம்பிய மனதுடனும்   நாம் நலமா என்று என்னை நானே கேட்பதுபோல சிரித்துக் கொண்டே ஒன்னுமில்லையே என்ற பதில் அவர்களுக்காகவே அந்த ஒன்னுமில்லை என்ற பதிலில் எத்தனை ...