நன்றி செலுத்துதல் (Gratitude)
வாழ்வை நேர்மறையாக அனுக ஆயத்தமாகும் போது பலவகையான நல்ல பழக்கங்களை பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய பழக்கங்ளில் மிக முக்கியமான மற்றும் மிக எளிதில் செய்யக்கூடிய ஒன்று நன்றியுணர்வோடு இருத்தல். இதைதான் gratitude என்பார்கள்.அது என்ன நன்றியுணர்வு அவ்வளவு முக்கியமான ஒன்றா? நேர்மறையாக வாழ்வை அனுக நன்றி செலுத்துதல் தேவையா? என்று கேட்கலாம்.ஆம் நேர்மறை ஆற்றல்களை யாவும் நன்றியணர்வின் வாயிலாகவே நமது வாழ்வை அழகு படுத்துகிறது என்று கூறலாம். பய உணர்வு எப்படி எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றதோ அதுபோல நன்றி செலுத்துதல் எனப்படும் நன்றியுணர்வு வலிமையான நேர்மறை சக்தியை நம்முள் பிரசிவிக்கிறது. எண்ணங்கள் பற்றி பேசத் தொடங்கியபோதே நேர்மறையாக சிந்திக்க "இல்லாமை குறித்து வருந்தாதே இருப்பவைக் குறித்து ஆனந்தப்பட்டு மெச்சிக் கொள் "என்று பேசியிருப்பேன். நம்மிடம் இருக்கும் இல்லாமை கண்டு வருந்தி கொட்டிக்கிடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் மறந்திருப்போம். நம்மிடம் இருப்பதைக் கண்டு களிப்புரும் தருனத்தில் நன்றியுணர்வு பிறக்கிறது. When you start to count your good things you may definitely will ge...